tag:blogger.com,1999:blog-92037349087651092312024-03-13T01:11:36.744-07:00முத்துக்குளியல்எண்ணப் பகிர்வுகள்நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-36577076809150886332021-06-24T14:15:00.001-07:002021-08-09T00:34:00.282-07:00அரசு இணையத்தளங்களில் தமிழின் நிலை<p> <span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">சமீபத்தில் அரசு விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ஒருவர் பற்றிய கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்கவரல்லர் என நீக்கச் சொல்லி பரிந்துரை வந்தது. காரணம் அந்த எழுத்தாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை என்பதாகும். குறிப்பாக கூகிளில் தேடினால் அவர் எழுத்தும் அவர் நூல்களும் மட்டுமே கிடைக்கின்றனவே தவிர அவரைப் பற்றி வேறு அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கவில்லை. நுட்</span><wbr style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"></wbr><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">பரீதியாகப் பார்த்தால் இதுவரை அரசுச் செய்திக் குறிப்பாக வெளிவந்த அனைத்து ஆவணங்களும் ஒருங்குறியிலில்லை அதனால்தான் </span><wbr style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"></wbr><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">கூகிள் போன்ற தேடுதளத்தில் தேடினால் அரசு செய்திக் குறிப்புகள் எதுவும் நேரடியாகக் கிடைப்பதில்லை. இது ஒருவருக்கான பிரச்சினையில்லை தமிழ்ப் பயன்பாட்டிற்கான பிரச்சினை. </span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoxbs-2RQfoX_hCzikRKqtFD24192_ajNA8pdxveByGT-Ib0hy38k78qFlyFB-K-aONrJgMtXoat0T67lCK1Nr77qjjNyD5nlUMH80XhLyBzXqRCtwGI7Ay5X9B11ZL9xWcJs0kRp0vr8/s1493/tn_gov_website.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="908" data-original-width="1493" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoxbs-2RQfoX_hCzikRKqtFD24192_ajNA8pdxveByGT-Ib0hy38k78qFlyFB-K-aONrJgMtXoat0T67lCK1Nr77qjjNyD5nlUMH80XhLyBzXqRCtwGI7Ay5X9B11ZL9xWcJs0kRp0vr8/s320/tn_gov_website.png" width="320" /></a></div><br /><span style="color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"><br /></span><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><span><a name='more'></a></span></span><p></p><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">பொதுவாக முக்கிய அரசுத் தளங்களை எல்லாம் தேசிய தகவலியல் மையம் நிர்வகிக்கின்றது. மற்ற தளங்கள் எல்லாம் அந்தந்த துறையின் கீழோ அந்த அமைப்பினாலோ நிர்வகிக்கப்படுகின்றன. இதில் சுமார் 60% தமிழக அரசின் தளங்களுக்கு மேல் தமிழ் இடைமுகமில்லை. அதாவது ஆங்கிலத்தில் மட்டுமே அத்தளம் இருக்கும், தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரால் அணுக இயலாமல் போகும். வரலாற்றில் பார்த்தால் 1999 இல் டேம், டேப் குறியாக்கத்தைத் தமிழக அரசு தரப்படுத்தியது. இதன் மூலம் தமிழ் படிப்படியாக கணினி பயன்பாட்டில் பரவலானது. தமிழக அரசு இணையத்தில் முதன்முதலில் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டு வந்தது. பின்னர் தட்டச்சுப் பலகை மூலம் தமிழில் எழுதி அதை ஒளிப்படமாகப் பதிவேற்றினர். இதுவே நெடுங்காலமாகச் செய்துவந்தனர். பின்னர் 2007 காலக்கட்டத்தில் டேம், வானவில் என்று தமிழ் எழுத்துருவில் செய்தி வெளியிடத் தொடங்கினர். 2013, 2017 காலகட்டத்தில் அரசு அலுவலகத்தில் ஒருங்குறி குறித்த அரசாணைகள் வெளிவந்தன. ஒருங்குறி பயன்படுத்தச் சொல்லி வந்த செய்திக் குறிப்பே ஒருங்குறியில் இல்லை என்பது ஒருபுறமிருக்க சுமார் 14 ஆண்டுகள் ஆகியும் ஒருங்குறி முறைக்கு மாற்றவில்லை. மத்திய அரசின் செய்திக் குறிப்புகளே தமிழ் ஒருங்குறியில் வெளியிடப்படும் நிலையில் தமிழக அரசின் செய்திக் குறிப்புகள் அனைத்தும் தமிழ் ஒருங்குறியில் விரைவில் வெளியிட வேண்டும். இயன்றால் இதுவரை வெளிவந்த பழைய செய்திக் குறிப்புகளையும் வானவில் குறியாக்கத்திலிருந்து ஒருங்குறிக்கு மாற்றி வெளியிட வேண்டும். இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவராலும் எளிதில் தேடிப் படிக்க முடியும். பிடிஎப் கோப்பாகவே இருந்தாலும் குறியாக்கம் சிதையாமல் ஐஎஸ்ஓ 19005-1 தரத்தில் வெளியிடுவதன் மூலம் இத்தரவுகளைக் கணினியும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். </span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">அண்மையில் உருவான மயிலாடுதுறையைத் தவிர மற்ற 37 மாவட்டங்களுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தனியான இணையத்தளங்களுள்ளன. இவையெல்லாம் சிறப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழில் இடைமுகம் கொண்டதாக உள்ளன. தமிழ் நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளுள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஆகிய ஏழு மட்டுமே தனியான இணையத்தளத்தைக் கொண்டுள்ளன. ஒப்பீட்டளவில் சென்னையில் தான் அதிகமான மக்களிடம் ஆங்கிலப் பயன்பாடு உள்ளது. ஆனால் சென்னையைத் தவிர அனைத்துத் தளங்களிலும் ஆங்கில இடைமுகம் மட்டுமே உள்ளன. மதுரை மற்றும் கோவை மாநகராட்சி இணையத்தளங்களில் கூகிள் மொழிபெயர்ப்பைப் பெயரளவில் கொண்டுள்ளன. இதை மாற்றி சென்னையைப் போல அனைத்து உள்ளாட்சி அமைப்பின் இணையத்தளங்களும் தமிழில் இருக்க வேண்டும்.</span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகம் உட்பட ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழக இணையத்தளங்களிலும் தமிழ் இடைமுகமில்லாமல் உள்ளன. விதிவிலக்காக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் தமிழ் இடைமுகம் கொண்டுள்ளன. வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற தளங்களில் சில செய்திகள் தமிழிலிருந்தாலும் தளத்தின் இடைமுகம் ஆங்கிலத்திலேயே உள்ளன. ஐஐடி மெட்ராஸ் தளமே தமிழிலும் வேண்டும் என்று கேட்க வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளே தங்கள் தளத்தைத் தமிழில் வெளியிடாமல் இருப்பது தர்மசங்கடமே. </span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம், வேலைவாய்ப்புத் தளம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வியுதவித் தொகைத் தளம் எனச் சராசரி நபர்கள் பயன்படுத்தும் தளங்களில் எல்லாம் தமிழ் இடைமுகம் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம், தகவல் தொழில்நுட்பத்துறை போன்றவை தமிழ் இடைமுகம் வைத்திருந்தாலும் அவை முன்பக்கத்தில் இணைப்பாகக் கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட தளங்களே நூற்றுக்கு மேலுள்ளன. கலைப் பண்பாட்டுத் துறை, இந்து சமய அறநிலையத்துறை போன்ற சில தளங்கள் தமிழக அரசின் தளங்களிலேயே சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. அழகு தமிழில் துறைகளின் பெயர்கள் முத்து முத்தான எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அது போல மற்ற தளங்களும் தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் முன்பு ஒரு ஆங்கிலத்தில் இணையத்தளம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அவற்றுள் சில தமிழில் மாறிவருகின்றன. அவை அனைத்துக் கோயிலுக்கும் விரிவு படுத்த வேண்டும். </span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">சாகித்திய அகாதமி விருது வழங்கிய அனைவர் பெயரும் அகாதமி தளத்தில் பட்டியலிட்டுள்ளனர். அது போல இதுவரை தமிழ் வளர்ச்சித் துறையினால் விருதளிக்கப்பட்ட தமிழ் ஆளுமைகள் பட்டியல் பொதுவில் இல்லை. இது விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிலை வைப்பதற்கு இணையாக அவர்கள் பங்களிப்பை ஆவணமாக்கப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் உணரவேண்டும். அரசுத்துறையினர் தங்கள் தகவல் தொடர்பை அதிகரிக்க சமூகத்தளங்களில் பதிவிடுவது பாராட்டுக்குரியது ஆனால் அதிலும் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழில் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும். </span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">பல வளர்ந்த நாடுகளின் அரசுத் தளங்கள் எல்லாம் பகிர்வுரிமை கொண்டவை. அதாவது அதன் உள்ளடக்கங்களைப் பகிரலாம், பயன்படுத்தலாம் என்று சட்டரீதியான குறிப்பினை இட்டிருப்பார்கள். ஆனால் இந்தியாவில் பொதுத் தகவல் உரிமம்(GODL) சட்டத்தில் இருந்தாலும் பெரும்பாலான தளங்களில் காப்புரிமைக்குட்பட்டவை என்ற வாசகமே உள்ளது. 2016 இல் அரசாணை 105 இன் படி தமிழ் வளர்ச்சிக்கான வெளியீடுகள் அனைத்தும் படைப்பாக்கப் பொதுவுரிமத்தில் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் அத்துறைசார்ந்த தளங்களில் காப்புரிமை இடப்பட்டுள்ளன. இதனால் விக்கிமூலம், பொதுவகம் போன்று சர்வதேசக் களஞ்சியங்களில் இவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கலுள்ளது. எனவே மக்கள் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள வகைசெய்யும் படைப்பாக்கப் பொதுவுரிமையை இயன்றவரை அனைத்து அரசுத் தளங்களிலும் வெளியிடவேண்டும். பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் குறைந்தது முக்கியத் தளங்கள் எல்லாம் சர்வதேச வழிகாட்டல்படி அமைக்க வேண்டும். அதாவது முறையான பண்புகளுடன் தளவடிவமைப்பு, திரைபடிப்பான், ஒலி வடிவ கேப்சா, ஒளிப்படங்களில் அல்ட் விவரிப்பு போன்று உலகளாவிய வலைச் சேர்த்தியத்தின்(W3C) பல நுட்ப வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும். அண்மையில் கொரோனா நன்கொடை தளம் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக இல்லை என்று ஒரு கடிதத்தைப் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகள் சங்கம் அரசிற்கு எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">பொருந்தொற்றுக் காலத்தில் இணையப் பயன்பாடு அபரிவிதமாக அதிகரித்துள்ளதும், எதிர்வரும் நவீன நுட்பங்களைக் கருத்தில் கொண்டும் தமிழ்ப் பயன்பாட்டை இணையத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கணித் தமிழ் சார்ந்த தொழில் வளர்ச்சியும், ஆய்வுகளும் பெருகும். பெயர்ப் பலகையில் தமிழல்லாமல் மாற்று மொழியிருந்தால் எதிர்க்குரல் எழுப்பும் அதே முக்கியத்துவம் தமிழில்லாத தளங்களுக்கும் எழுப்ப வேண்டும். ஒருங்குறி மற்றும் தமிழ்ப் பயன்பாடு குறித்து அண்மையில் வெளிவரும் அறிவிப்புகள் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் நிலையான அறிவிப்பாக அனைத்து அரசுத் தளங்களும் தமிழில் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பும் வேண்டும். </span><div><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></span></div><div><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">--------------------</span></div><div><span style="color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"><span style="background-color: white;"><a href="https://www.hindutamil.in/news/opinion/columns/684926-tamil-in-government-sites.html" rel="nofollow" target="_blank">இந்து தமிழ் திசை</a> இதழுக்காக எழுதியது. </span></span></div><div><span style="color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"><span style="background-color: white;">ஆய்விற்குத் திரட்டிய தளங்களின் <a href="https://docs.google.com/spreadsheets/d/e/2PACX-1vRRTB9FBc3YoQ454MWZdrC_JaalARFWP6SO9HVUpCjA9Zf2QRISWKlaWEyXgb0LKiUffcthAg9zHlZQ/pubhtml?gid=1978551163" rel="nofollow" target="_blank">பட்டியல்</a></span></span></div><div><span style="color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"><br /></span></div><div><span style="color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"><u>பிற்சேர்க்கை:</u></span></div><div><span style="color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;">ஐஐடி தார்வாட் தளத்தில் கன்னட மொழியிலும் மொழிபெயர்த்துள்ளனர்.</span></div><div><span style="color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;">கூகிள் விளம்பரங்கள் கொண்ட ஒரே தமிழக அரசு இணையத்தளம் <a href="https://www.aazp.in/">வண்டலூர் உயிரியல் பூங்கா</a></span></div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-60765325782821207202021-05-15T08:21:00.005-07:002021-06-24T14:16:08.873-07:002021 தமிழகத் தேர்தல் புள்ளிவிவர அலசல்
கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் வெற்றிகரமாக 2021 சட்டச்சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. புதிய அமைச்சரவை உருவாகிறது. வென்றவர்கள் தோற்றவர்கள் என்று அரசியல் ஒருபுறம் இருக்க, மேம்போக்கான வெற்றி எண்ணிக்கையைவிட ஒரு அடுத்தநிலை பார்வையை இக்கட்டுரை இந்தத் தேர்தலின் புள்ளிவிவரம் கொண்டு முன்வைக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் சராசரியாக 72.81% வாக்களித்துள்ளோம். தபால் மற்றும் மின்னணு வாக்கு என மொத்தம் 4.623 கோடி வாக்குகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 107 கட்சிகளும் 2073 சுயேச்சை வேட்பாளர்களும் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்கிறது தேர்தல் ஆணையத் தகவல். ஆனால் சில இடங்களில் கூட்டணியில் இருந்தும் சுயேச்சையாக களமிறங்கியதும், மதிமுக, சமக, தமக போன்ற கட்சிகள் மாற்றுக் கட்சிச் சின்னத்தில் நின்றதும் இத்தகவலில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். கடந்த <a href="https://opinion.neechalkaran.com/2016/05/tn-election-2016.html">2016 தேர்தலில்</a> 92 கட்சிகளும், 1547 சுயேச்சை வேட்பாளர்களுமே போட்டியிட்டிருந்தனர்.<div> <div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN3i7OIw5uXbYmHuSVwzLVnZ0JjYuf9ifuJgRyIhTO7FjeFeMgVUxAu5C-Df356wntqRW4vfWqwKGhJE1p_PiAKzdiBCmZbxcJA2gDhEmF6GCMLFOAhNjjRbqmNLNX66JIWNx7StgurQg/s720/tn+assembly+election+2021.png" style="display: block; padding: 1em 0px; text-align: center;"><img alt="" border="0" data-original-height="445" data-original-width="720" height="397" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN3i7OIw5uXbYmHuSVwzLVnZ0JjYuf9ifuJgRyIhTO7FjeFeMgVUxAu5C-Df356wntqRW4vfWqwKGhJE1p_PiAKzdiBCmZbxcJA2gDhEmF6GCMLFOAhNjjRbqmNLNX66JIWNx7StgurQg/w640-h397/tn+assembly+election+2021.png" width="640" /></a><span><a name='more'></a></span></div>
அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் வரிசையில் ஐ. பெரியசாமி (1,35,571) -திமுக, எ.வ. வேலு (94,673 ) -திமுக, பூந்தமல்லி வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி (94,110), நான்காவதாக 93,802 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வருகின்றனர். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களாக தி. நகர் தொகுதி ஜெ. கருணாநிதி(137), மொடக்குறிச்சி தொகுதி மருத்துவர் சரஸ்வதி(281), தென்காசி தொகுதி பழனி நாடார் (370), ஐந்தாவதாக 746 வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் ஆகியோர் வருகின்றனர். </div><div><br /></div><div>அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளாக சுமார் 3.9 லட்சம் பெற்ற சோழிங்கநல்லூர் உள்ளது, அதற்கடுத்து 3 லட்சத்திற்கும் மேல் பெற்ற கவுண்டம்பாளையம், மாதவரம், ஆவடி என உள்ளன. குறைவான வாக்கு பெற்ற தொகுதி என்றால் 101650 பெற்ற துறைமுகம் தொகுதி தான். அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் என்றாலும் அதே சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் தான். அங்கேதான் இரு பிரதானக் கட்சி வேட்பாளரும் அதிகமான வாக்குகளை 2016 ஆம் தேர்தலில் பெற்றனர். இம்முறை எடப்பாடி தொகுதியில் தான் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதிமுகவின் பலமான தொகுதியாக 2016 இல் ஆர்கே நகர் இருந்தது இம்முறை 66% ஆதரவுடன் எடப்பாடி உள்ளது. பலவீனமான தொகுதியாக திருச்சி மேற்கு 18% ஆதரவுடன் உள்ளது. திமுகவின் பலமான தொகுதியாக கடந்த தேர்தலில் ஒட்டன்சத்திரமும், பலவீனமான தொகுதியாக எடப்பாடியும் இருந்தது. இம்முறை அதே திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் தொகுதி(72%) பலமானதாகவும், எடப்பாடி தொகுதி(28%) பலவீனமாகவும் உள்ளன. </div><div><br /></div><div>சுயேச்சைகளே இல்லாத தொகுதியாக பவானிசாகரும், அதிக எண்ணிக்கையில் 68 சுயேச்சைகள் போட்டியிட்ட தொகுதியாக கரூரும் உள்ளன. அதிக வாக்கு பெற்ற சுயேச்சையாகப் பனங்காட்டுப் படை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளர் ஹரி நாடார்(37,727), சமூகநீதி கூட்டமைப்பின் புதுக்கோட்டை வேட்பாளர் பாலகிருஷ்ணன்(23,771), வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம், திருமயம் வேட்பாளர் செல்வகுமார்(15144) ஆகியோர் உள்ளனர். வைப்புத் தொகை இழக்காத ஒரே சுயேச்சை ஹரிநாடார் என்பது குறிப்பிடத் தக்கது. </div><div><br /></div><div><b>திமுக கூட்டணி:</b>
45.3% சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் முதலிடமும், 73 தொகுதிகளில் இரண்டாமிடமும், கோவை தெற்கு மற்றும் கோவில்பட்டியில் மூன்றாம் இடமும் இக்கூட்டணி பெற்றது. அதிமுக கூட்டணியைவிட இருமடங்கு அதாவது 1,65,727 தபால் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளனர். இரட்டை இலையுடன் நேரடியாக 159 இடங்களில் உதயசூரியன் போட்டியிட்டு 109 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலமான தொகுதி கிள்ளியூர், சிபிஐ கட்சிக்கு தளி, சிபிஎம் கட்சிக்கு கீழ்வேளூர், விசிகவிற்கு காட்டுமன்னார்கோயில், மதிமுகவிற்கு சாத்தூர் (தனிச்சின்னமில்லை என்பதால் உதயசூரியனாகக் கணக்கில் வருகிறது)</div><div><b><br /></b></div><div><b>அதிமுக கூட்டணி:</b>
39.7% சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளில் 75 தொகுதிகளில் முதலிடமும், 159 தொகுதிகளில் இரண்டாமிடமும், திண்டுக்கல் ஆத்தூரில் வைப்புத் தொகை இழப்பும் இக்கூட்டணி பெற்றது. வாக்கு சதவிகித வித்தியாசத்தில் 50% மேல் 2 தொகுதியிலும், 40% மேல் 4 தொகுதிகளிலும், 30% மேல் 8 தொகுதிகளிலும், 20% மேல் 20 தொகுதிகளிலும், 10% மேல் 49 தொகுதிகளிலும், 1% மேல் 64 தொகுதிகளிலும், அதற்கும் கீழ் 12 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. </div><div><br /></div><div><b>நாதக</b>
234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மொத்தம் 6.57% வாக்குகள் பெற்று, சீமான் 24% வாக்கு பெற்று அவர் மட்டுமே வைப்புத் தொகை மீட்டார். மொத்தமாக 177 தொகுதிகளில் மூன்றாமிடமும், மீதி 57 தொகுதிகளில் நான்காமிடமும் பெற்றனர். தெளிவான மூன்றாம் அணியாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில் 63 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளனர். </div><div><br /></div><div><b>மநீம கூட்டணி:</b>
தேர்தல் ஆணையத் தகவல்படி அதிகாரப்பூர்வமாக 218 தொகுதியில் போட்டியிட்டு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூரில் மட்டும் வைப்புத் தொகை இழக்கவில்லை. மொத்தம் 2.7% வாக்குகளும், 25 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 77 தொகுதிகளில் நான்காம் இடமும், 56 தொகுதிகளில் ஐந்து மற்றும் 24 தொகுதிகளில் ஆறு என்ற இடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடம் பெற்ற கமல்ஹாசன் உட்ப 12 வேட்பாளர்கள் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளனர். குறிப்பாக மருத்துவர் மகேந்திரன், பழ. கருப்பையா, ஸ்ரீபிரியா, சந்தோஷ் பாபு மற்றும் பத்மாபிரியா போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். </div><div><br /></div><div><b>அமமுக கூட்டணி:</b>
2.8% சதவிகித வாக்குகளுடன் 234 தொகுதிகளில் 1 இரண்டாமிடம், 27 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 75 தொகுதிகளில் நான்காம் இடமும், 71 தொகுதிகளில் ஐந்து மற்றும் 44 தொகுதிகளில் ஆறு என்ற இடங்களைப் பெற்றது. டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் உட்பட 15வேட்பாளர்கள் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று, வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளனர். 227 தொகுதிகளில் வைப்புத் தொகை இழந்தனர். </div><div><br /></div><div><b>நோட்டா:</b>
மொத்தம் 3,45,538 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளன, அதில் 2,812 தபால் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. 12 தொகுதிகளில் நோட்டா நான்காமிடமும், 77 தொகுதிகளில் ஐந்தாம் இடமும், 108 இடங்களில் ஆறாமிடமும் பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில்தான் அதிக சதவிகிதமாக நோட்டா பதிவாகியுள்ளது. விராலிமலையில் குறைந்த அளவிற்கே நோட்டா பதிவானது. </div><div><br /></div><div>வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட மூன்றாவது இடத்தைப் பிடித்த கட்சி அதிக வாக்குப் பெற்றால் அது கட்டாயம் வெற்றியைத் தீர்மானிக்கும். அவ்வகையில் 92 தொகுதிகளில் மூன்றாம் இடம் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த வகைத் தொகுதிகள் 129 இருந்தன. அதே போல 36 தொகுதிகளில் நான்காம் இடமும் சேர்த்தால் வெற்றியைத் தீர்மானிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 42 இருந்தது. ஆக இரு பிரதானக் கூட்டணிக்கு மாற்றாகக் கடந்த தேர்தலைப் போல இம்முறை ஓட்டுப் பிரிப்பு நிகழவில்லை எனத் தெரிகிறது. ஜனநாயகத்தின் வலுவே மக்கள் பங்களிப்பான தேர்தலில் தான் உள்ளது. வெறும் வெற்றித் தோல்வியைவிட அதன் புள்ளிவிவர அலசல் புதிய கோணங்களை அறியச் செய்கின்றது, அரசியல் விழிப்புணர்வு ஜனநாயகத்தினை உறுதிசெய்கின்றது. </div><div><br /></div><div><br /></div><div><b>மேற்கோள்கள்:</b>
தேர்தல் ஆணையத் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட தரவுகள்:
<a href="https://docs.google.com/spreadsheets/d/e/2PACX-1vTYnHSLw8qZSQXoc3eTxvm7prBmgtQAmnzykIZUgQUoHc6RPzBJFcqUR28OMetcq5DvAoG5X7NRpZKq/pubhtml" rel="nofollow" target="_blank">2021</a>, <a href="https://docs.google.com/spreadsheets/d/17uyrpva6xa7xNhgvx58GS_ocbAOU4JOwmIoVrDLYnA0/pubhtml" rel="nofollow" target="_blank">2016</a></div><div><br /></div><div><a href="https://tamil.news18.com/news/special-articles/2021-tamil-nadu-election-statistical-analysis-special-view-aru-458933.html" rel="nofollow">நியூஸ்18 தளத்திற்காக</a> எழுதிய கட்டுரை<br /></div><div><br /></div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-74529573213558761082021-01-11T16:10:00.003-08:002021-06-24T14:15:52.756-07:00கணித்தமிழ் வளர்ச்சிக்கான மாதிரி தேர்தல் அறிக்கை<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_f6vWEEyioecrwTdfFHgB_fF2tdF_dGftKCywcHVE7GPrU59YFpAC1ulzUs7pF-Yx9ZKMy5NoFeBdnra-FIBEiFgKS0Mvy_cP_FWTy2v1JmEaVC8NiuUskzWfUz7M6z_udi70MNORRe0/s276/%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="238" data-original-width="276" height="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_f6vWEEyioecrwTdfFHgB_fF2tdF_dGftKCywcHVE7GPrU59YFpAC1ulzUs7pF-Yx9ZKMy5NoFeBdnra-FIBEiFgKS0Mvy_cP_FWTy2v1JmEaVC8NiuUskzWfUz7M6z_udi70MNORRe0/w320-h276/%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg" width="320" /></a></div><br /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></span><p></p><p><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">இது தேர்தல் காலம்; ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரத்தை மக்கள் பெறும் காலம். எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்று கனவுகளும் வாக்குறுதிகளும் சந்திக்கும் காலம். இக்காலகட்டத்தில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கான கனவுகளை இங்கே மாதிரி தேர்தல் அறிக்கையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் தமிழ் வளர்ச்சியும் ஒருசேரும் புள்ளி இணையத்தமிழ் வளர்ச்சியாகும். அந்த அடிப்படையில் ஆட்சிக்கு வரும் அரசு செய்ய வேண்டியன:</span></p><span><a name='more'></a></span><div style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /><b>பயன்படுத்தல்</b><br /><ul><li style="margin-left: 15px;">அரசு அலுவலகங்களைவிட அரசு இணையத்தளங்களே மக்கள் அதிகமுறை கடந்து வந்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலான தளங்கள் தமிழில் இல்லை. எனவே மாநில, மத்திய அரசின் இணையத் தளங்கள் அனைத்திலும் தமிழ் இடைமுகம் இருக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;">அரசின் செய்திக் குறிப்புகள், வெளியீடுகள் என அனைத்திலும் ஒருங்குறி பயன்பாட்டை உறுதி செய்யவேண்டும். இதனை ISO 19005-1 தரத்தில் pdf, odf அல்லது doc வடிவில் வெளியிட வேண்டும். இதனால் இயல்மொழிப் பகுப்பாய்வு நுட்பங்களிலும் பயன்படுத்த முடியும்.</li><li style="margin-left: 15px;">மக்களாட்சியின் அடிப்படை சட்டம் ஆனால் சட்டங்கள் எளிய மொழியில் எளியவருக்குக் கிடைப்பதில்லை. ஆகவே சட்டங்களையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழில் கிடைக்கும் வகையில் செய்யவேண்டும். தீர்ப்பும், சட்டமும் எந்த மொழியிலிருந்தாலும் அதனைத் தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட வேண்டும்.</li><li style="margin-left: 15px;">முனைவர்கள், ஆய்வாளர்கள் என்று கல்விப் பின்புலமும், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று தொழில் பின்புலமும் கொண்டவர்களை இணைக்கும் பாலமாக ஆண்டுதோறும் இணையத் தமிழ் மாநாட்டினை அரசு நடத்த வேண்டும்.</li><li style="margin-left: 15px;">சொல்வங்கிகள், சொல்லடைவுகள், பல்துறைக் களஞ்சியங்கள் என இணைய வளங்களை அதிகரிக்க வேண்டும். சொற்குவை போன்ற திட்டங்களின் படைப்புகளைப் பல வடிவங்களில் வெளியிட்டுப் பல அமைப்புகளும், தளங்களும் பயன்படுத்த வழிகோலவேண்டும்.</li><li style="margin-left: 15px;">கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அரசு வெளியிட்ட தமிழ்க் களஞ்சியம் என்ற மாபெரும் தொகுதி அதன் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. அதனை இந்தக் கணினி யுகத்தில் புதுப்பித்து இணையத்தில் தமிழுக்கு வளமான களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;">இந்தப் பத்தாண்டின் முக்கியத் தொழில்நுட்பமான இயல்மொழிப் பகுப்பாய்வினையும் செயற்கை நுண்ணறிவினையும்(AI) பயன்படுத்திப் பல வீட்டு உபயோகப் பொருட்கள் உருவாக உள்ளன. அதற்கு முன்னரே கருவிகளில் மக்களின் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும். தானியக்கப் பண வழங்கியிலிருந்து, கைப்பேசி வரை தமிழகத்தில் விற்பனையாகும் அனைத்து மின்னணுச் சாதனங்களிலும் தமிழ் இடைமுகத்தைக் கட்டாயமாக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;"></li><li style="margin-left: 15px;">விக்கிப்பீடியா, அமேசான், கூகிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இட்டு, அதன் தளங்களில் தமிழ் வளங்களை அதிகரிக்க முனைய வேண்டும்.</li></ul><br /><b>கற்பித்தல்</b><br /><ul><li style="margin-left: 15px;">தமிழ்க் கணினிப் பயன்பாட்டில் கற்பிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் கல்வித்துறையின் ஐ.சி.டி.(ICT) கொள்கை வகுக்க வேண்டும். தொழில் படிப்புகள் முதல் கலை அறிவிய வரை கல்லூரிப் பாட நூல்கள் தமிழில் இணையத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.</li><li style="margin-left: 15px;">தமிழ்த் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வைத் தரும் கணித்தமிழ்ப் பேரவைகளை விரிவு படுத்தி அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்க வேண்டும். சமூகப் பணி புரியும் தேசிய மாணவர் படை போல கல்லூரி தோறும் இணையத் தமிழ்ப் பங்களிப்பு செய்ய இந்தப் பேரவை பயன்பட வேண்டும்.</li><li style="margin-left: 15px;">கல்வித் தொலைக்காட்சி இன்னும் பல மாணவர்களை அடைய உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கைக்கணினியும்(tab) விலையில்லாமல் கொடுக்கலாம். கூடவே கற்றல் வழங்கல் மற்றும் பயன்பாட்டு மென்பொருட்களை அதில் பொதித்துக் கொடுப்பதன் மூலம் மாணவர்கள் இன்னும் சிறப்பாகக் கற்றுக் கொள்ளமுடியும்.</li><li style="margin-left: 15px;">100% கணினிக் கல்வியறிவைப் பெற்ற மாநிலமாக உருவாக்கக் கொள்கை வகுக்க வேண்டும். வயது வந்தோருக்கான அறிவொளி இயக்கம் போலத் தற்காலத் இணையப் பயன்பாட்டைக் கற்றுத் தர அமைப்பை உருவாக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;">தமிழிணையக் கல்விக் கழகம் வழியாகத் தமிழ் கற்பிக்கப்பட்டு வந்தாலும், இதனை உலகளவில் தமிழ் கற்பிக்கும் தனித்தளமாக மேம்படுத்த வேண்டும். udemy, coursera போல நவீன வடிவங்களில் கற்றல் அனுபவத்தைத் தரவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் இதற்கான வகுப்பறைகளையும் பிற கல்வி நிலையங்களுடன் சேர்ந்து ஏற்படுத்தலாம்.</li><li style="margin-left: 15px;">மாவட்டம் தோறும் நூலகங்களில் மின்னூல்கள் படிக்கக் கைக்கணினிகளையும், பல்லூடகப் பயன்பாட்டுச் சாதனங்களையும் அதிகப்படுத்தல் வேண்டும். அச்சுப் பத்திரிக்கைகள் போல இ- பத்திரிக்கைகளையும் சந்தா செலுத்தி நூலகத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.</li><li style="margin-left: 15px;">சூதாட்டம், கடன் செயலி போன்றவற்றால் நிகழும் தற்கொலைகளுக்குத் தீர்வாக சைபர் குற்றப்பிரிவின் வழியாகவோ தனி அமைப்பின் மூலமோ போலிச் செயலிகள், பாதுகாப்புக் குறைபாடுகள், இணையக் குற்றங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். <br /></li></ul><br /><b>கண்டுபிடித்தல்</b><br /><ul><li style="margin-left: 15px;">பல்கலைக் கழகங்களில் இயற்கை மொழிப் பகுப்பாய்வு, மின்னுருவாக்கம், மென்பொருளுருவாக்கம் போன்ற துறைகளில் ஆய்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் வெளியீடுகளைத் திறமூலமாக வெளியிட்டு அனைவருக்கும் பயன்படச் செய்ய வேண்டும்.</li><li style="margin-left: 15px;">கால் நூற்றாண்டாகப் பெரும்பாலும் ஏட்டளவில் மட்டுமே கணித்தமிழ் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதற்குச் செயல்வடிவத்தைக் கொடுக்க கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆர்வலர்கள் என்று யாவரும் பயன்படும் வகையில் கணித்தமிழுக்கான ஆய்வு மையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் பொருட்செலவில்லாமல் தமிழில் மென்பொருட்களை யாரும் வெளியிட முடியும்.</li><li style="margin-left: 15px;">இளைய தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் அனைத்து வசதிகளுடன் தகவல் தொழில்நுட்ப இன்குபேட்டர் மையங்களை அமைக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;"></li><li style="margin-left: 15px;">ஆண்டுதோறும் புத்தாக்க சவால்(Hackathon) போட்டிகளை, கல்லூரி, தன்னார்வலர், தனியார் என்று பல நிலைகளில் நடத்த வேண்டும்.</li><li style="margin-left: 15px;">துளிர் நிறுவனங்கள்(startup) தொடங்கவும், தொடர்ந்து இயங்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்.</li></ul><br /><b>மேம்படுத்தல்</b><br /><ul><li style="margin-left: 15px;">நூலகங்கள், அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு அலுவலகம் எனக் கணினிமயமாக்க வேண்டும். இது அவற்றின் திறனை மட்டும் மேம்படுத்தாமல் தமிழ்ப் பயன்பாட்டையும் உறுதி செய்யும்.</li><li style="margin-left: 15px;">சிறந்த நூலுக்குப் பரிசளிப்பதைப் போலச் சிறந்த இணையத்தளத்திற்கும், சிறந்த மின்னூலுக்கும் பரிசளிக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;">கட்டற்ற வளங்களை ஊக்குவிக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;">விக்கிமீடியா திட்டங்கள், அரசு இணையத்தளங்கள், சர்வதேச அறிவுத் தளங்கள் என முக்கிய வளங்களைத் தரவுக் கட்டணமின்றி பயன்படுத்தத் தரவு அட்டைகளை அறிமுகப் படுத்தலாம்.</li><li style="margin-left: 15px;">தினமும் அதிகரிக்கும் மின்கழிவுகளைக் கையாளவும் முறைப்படுத்தவும் சரியான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வைப் பள்ளியிலிருந்தே கொண்டுவந்தால் சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பினைத் தவிர்க்கலாம்.</li><li style="margin-left: 15px;">அரசின் அனைத்து இணையச் சேவைகளும் கைப்பேசி ஒத்திசைவாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒத்திசைவாக <a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.w3.org/TR/WCAG20/&source=gmail&ust=1610496094891000&usg=AFQjCNEiAbWzOc1sIErU3SqJefZaQSvdvw" href="https://www.w3.org/TR/WCAG20/" style="color: #1155cc;" target="_blank">https://www.w3.org/<wbr></wbr>TR/WCAG20/</a> இந்த வழிகாட்டலைப் பின்பற்றி இருக்க வேண்டும்.</li><li style="margin-left: 15px;">இருளா, குறும்பா, படுக போன்ற அருகிவரும் தமிழ்நாட்டு மொழிகளுக்குப் புத்துயிர் அளிக்க அவற்றைக் கணினிமயப்படுத்த வேண்டும்.</li></ul></div><div style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">இணையத்தில் வளராத மொழிகள் அனைத்தும் அடுத்த தலைமுறையைத் தாண்டாது என்பது இன்றைய விதி. பல நாட்டுத் தமிழர்கள் இணையத்தமிழுக்கு வளம் சேர்த்து வந்தாலும் தனி மாந்தர்களால் செய்ய இயலாதவற்றை அரசின் முன்னெடுப்புகள் தான் செய்ய இயலும். இவை தேர்தல் அறிக்கையாக எதிர்வரும் தேர்தலில் பேசப்பட்டு, மேம்படுத்தி உரியவை செயல்பாட்டிலும் வரவேண்டும். </div><div style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">-------------</div><div style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><a href="https://tamil.news18.com/news/special-articles/election-manifesto-developmment-of-tamil-and-tamil-computing-yuv-390451.html" rel="nofollow" target="_blank">நியூஸ்18 தளத்திலும் இதைப் படிக்கலாம்.</a> </div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-88380196299177138992020-05-01T10:35:00.001-07:002020-05-01T11:03:37.084-07:00தெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம்<div>தெலுங்கு யுனிக்கோட் தொகுதியில் (தெலுங்கு நெடுங்கணக்கில் இல்லை) தமிழ் எழுத்துக்களான 'ழ' மற்றும் 'ற' சேர்க்கப்பட்டுள்ளன. <a href="https://twitter.com/unicode/status/1255281554483445761">இந்த</a> அறிவிப்பு வெளிவந்தவுடன் இணையத்தில் பலர் எதிர்த்தும், பலர் குழம்பியும் விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். எதுவாகினும் அறிவார்ந்த விவாதங்களே வளர்ச்சியின் அடையாளம். நேரடியாகத் தமிழ் யுனிக்கோடிற்குத் தொடர்பில்லை என்றாலும் விவாதப் பொருளானதால் இதுகுறித்த கருத்துப் பகிர்வு பலருக்கு உதவலாம். இதை எதிர்ப்பவர்கள் சொல்லும் சில குற்றச்சாட்டிகள் அடிப்படை அற்றவையாக இருந்த போதும் பல கேள்விகள் நியாயமானவை. இந்த விசயத்தில் ஆதரிக்கவோ எதிர்க்கவோ தேவையிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பார்வையாளனாக இது குறித்த சாராசரி கேள்விகளை திரு. <a href="http://www.virtualvinodh.com/">வினோத்திடம்</a> கேட்டேன். அவரின் பதில்கள் கீழே உள்ளன. அதற்கு முன்னர் அந்த முன்வரைவைப் படித்துக் கொள்ளலாம். </div><div><a href="https://www.unicode.org/L2/L2020/20119-two-telugu-letters.pdf">https://www.unicode.org/L2/L2020/20119-two-telugu-letters.pdf</a></div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO7z2KUuVgKq1XmGdsD7gfd8TeIjasSDxEcDxKZ70N96Ygm8pg4TZdmWZEFr-qVlhrjgF_wHpTepCtSQ_8_bTyHtBLJX1yqxGUrt97Mq_FRmFunCIoRViO5S12pFrlDtUOG19ddGNGaJY/" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="663" data-original-width="935" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO7z2KUuVgKq1XmGdsD7gfd8TeIjasSDxEcDxKZ70N96Ygm8pg4TZdmWZEFr-qVlhrjgF_wHpTepCtSQ_8_bTyHtBLJX1yqxGUrt97Mq_FRmFunCIoRViO5S12pFrlDtUOG19ddGNGaJY/s320/telugu+uniode.png" width="320" /></a></div><span><a name='more'></a></span><div class="separator" style="clear: both; text-align: center;">A conversation with proposal submitter on Telugu Unicode block allocation for two Tamil characters</div><div><br /></div><div><div id="gmail-:2am" style="font-family: roboto, robotodraft, helvetica, arial, sans-serif;"><div class="gmail-qQVYZb"></div><div class="gmail-utdU2e"></div><div class="gmail-lQs8Hd"></div><div class="gmail-btm"></div></div><div class="gmail-" style="font-family: roboto, robotodraft, helvetica, arial, sans-serif;"><div class="gmail-aHl"></div><div id="gmail-:29b" tabindex="-1"></div><div class="gmail-ii gmail-gt" id="gmail-:2an" style="direction: ltr; font-size: 0.875rem; margin: 8px 0px 0px; padding: 0px;"><div class="gmail-a3s gmail-aXjCH" id="gmail-:29a" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small; font-stretch: normal; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; line-height: 1.5; overflow: hidden;"><div dir="ltr"><div class="gmail_quote"><span class="gmail-im" style="color: #500050;"><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">What is the purpose of proposing Tamil characters(ழ,ற) into Telugu blocks?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>To digitize Tamil books written in Telugu script as they are.</div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">Why can't we use existing code points 0C5A & 0C34 instead of new?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>Nope. Those documents use Telugu RRA and Tamil RRA at the same time. </div><div><br /></div><div>And Unicode doesn't allow unifying two different looking characters. There is something called a 'graphemic' identity. Unicode encodes characters, not pronunciations.</div><div><br /></div><div>There is a reason there is Malayalam Letter II and Malayalam Letter Archaic II. Both are for writing 'ii', but one is an archaic sign and the other one is modern. Since they look drastically different, you need two different code points for them.</div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">Why can't you use different fonts or private blocks for digitalization instead of unicode block allocation?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>Script rendering doesn't work that way. If you read the proposal, one of the options was to re-use the Tamil characters, but that would mean the font would never be rendered properly.</div><div><br /></div><div>And it's within Unicode policy, to usually encoded borrowed characters as native characters.</div><div><br /></div><div>See: Latin letter Omega or Latin letter Chi (These are greek characters borrowed into Latin) </div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">Any historical evidence for usage of these 2 characters other than religious context in Telugu works?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>Tamil verses to be recited in Telugu still use these characters. There is enough evidence for them in the proposal.</div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">what is the historical relation of ழ or ற with Telugu language?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div> ழ was in Old Telugu but was lost in modern Telugu. And hence, the Tamil letter were borrowed into Telugu.<br /></div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">Do you have any support from Telugu community/organization on this proposal?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>Why? A language or script does not belong to anyone. They are needed for digitizing existing books and that is enough to propose them. It's not that I invented something ex nihilo. </div><div><br /></div><div>Latin has a few hundred obscure characters, Devanagari even more. Most of them are historical. A script always has a broader scope than the language. Telugu as such is cosmopolitan (like English. It is open to influences and is never shy to embrace change and, hence, it survives even after a dozen generations in Tamil Nadu). It has been used to write a number of languages other than Telugu: Namely, Tamil and Urdu. Even minority Dravidian languages like Kolami.</div><div><br /></div><div>There are at least a couple of dozen books that need to be digitized. If you can tell me how to digitize them preserving the graphemic identities and linguistic cross-cultural influence in plain-text, do let me know. I'm all ears.</div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">Can you elaborate any such inter language scripts allocations in Indic unicode blocks?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>Gujarati has consonants to write Avestan.</div><div><br /></div><div>Lao pretty much invented consonants out of nowhere to write Buddhist Pali in 1930s. </div><div><br /></div><div>Syriac has borrowed letters to write ழ ள ற ன. </div><div><br /></div><div>Arabic has created letters to write Tamil ழ, ள ற ன (It's called Arwi : Arabic-Tamil). </div><div><br /></div><div>Linguistic borrowing is a common thing. When cultures interact, they inevitably merge and borrow. </div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><br />Zha is special for Tamil character, why should we offer to other language?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>Nope, it is not.</div><div><br /></div><div>See above. As of now, I can write ழ in Malayalam, Kannada, Telugu, Arabic, and Syriac. </div><div><br /></div><div>Do not forget that Chinese also has the same phoneme.</div><div><br /></div><div>In terms of phonology, it is called a retroflex approximate and is found in at least a dozen languages.</div><div><br /></div><div><a href="https://en.wikipedia.org/wiki/Voiced_retroflex_approximant" target="_blank">https://en.wikipedia.org/wiki/<wbr></wbr>Voiced_retroflex_approximant</a> </div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">Can same happen if some one propose to add telugu script to Tamil script?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>If there are borrowings, and it is so. You cannot change history and erase cultural interaction. </div><div><br /></div><div>As I said, when two cultures interact, they inevitably mix. There is a reason why Yiddish, Syrio-Malayalam, and Arabic-Tamil exists.</div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">This is imposing Tamil characters into Telugu characters<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>Latin has hundreds of characters. Most of them archaic, and only used to digitize old books. This includes characters borrowed from Greek and Cyrillic.</div><div><br /></div><div>A script is always much more alive and elastic than the language itself and is a separate entity.</div><div><br /></div><div>Telugu written in the Telugu script or the Tamil script or the Kadamba script still remains Telugu.</div><div>Tamil written in the Tamil script or the Telugu script or the Arabic script or even Brahmi or Vatteluttu still remains Tamil.</div><div><br /></div><div>Script and Languages do not have a one-to-one connection. They are separate entities. </div><span class="gmail-im" style="color: #500050;"><div> </div><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0px 0px 0px 0.8ex; padding-left: 1ex;"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr">Why to spoil the uniqueness of both language?<br /></div></div></div></blockquote><div><br /></div></span><div>How does adding two additional characters spoil anything? Does it stop people from doing anything that can do today?</div><div><br /></div><div>Nope. They're gonna lay dormant. Like hundreds and thousands of Unicode characters and be used by some poor librarian or philology researcher, who wants to study how Tamil and Telugu interact and digitize the texts.</div><div><br /></div><div>If you're not a philology researcher, it's not need for you. </div><div><br /></div><div>For instance, if you are not an old English researcher, you don't need <span style="font-family: sans-serif; font-size: 14px;">ſ (long s). You can happily write /sun/ without ever using the character, but again some poor philologist out there needs to differentiate sun & </span><span style="font-family: sans-serif; font-size: 14px;">ſun. They need that. It is relevant to them. For others, it is irrelevant and doesn't affect them in any way.</span><br /></div><div><span style="font-family: sans-serif; font-size: 14px;"><br /></span></div><div><span style="font-family: sans-serif; font-size: 14px;">These are just that. Characters for research, philology and digitization. </span></div><div><span style="font-family: sans-serif; font-size: 14px;"><br /></span></div><div><span style="font-family: sans-serif; font-size: 14px;">Unicode is full of old and archaic characters. If I'm forced to use every one of them, then is it imposing. The last time I checked, no one is doing that :)</span></div><div><span style="font-family: sans-serif; font-size: 14px;"><br /></span></div><div><span style="font-family: sans-serif; font-size: 14px;"><br /></span></div><div><span style="font-family: sans-serif; font-size: 14px;"><br /></span></div></div></div></div></div></div></div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-73083344234724400852016-05-27T00:04:00.000-07:002016-05-27T00:04:43.112-07:00தேர்தல் முடிவுகள் சொல்லும் புள்ளிவிவரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">தேர்தல் வெற்றி தோல்வி என்பது ஒரு கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமோ, தண்டனையோ அல்ல. மாறாக வாக்காளரின் புறச் சூழலுக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவே. தெருவிற்குப் பாதாளச் சாக்கடை அமைத்தார் என்பதற்காக ஒரு நாட்டின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள உரிமை கொடுக்கும் வாக்காளர்களும் உள்ளார்கள். நாட்டிற்கு எது சிறந்தது என்று முடிவு செய்து பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கும் வாக்காளர்களும் உள்ளார்கள். இத்தேர்தல் முடிவுகளைப் பொருத்தமட்டில் அதன் புள்ளிவிவரங்கள் கொண்டு பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளமுடியும். எந்தக் கட்சி எந்தளவிற்குச் செல்வாக்கு பெற்றுள்ளது, எங்கே அது பலமிழந்துள்ளது என்று அறிந்து கொள்ளமுடியும். வாக்கு எண்ணிக்கையைவிட வாக்கு சதவீதம் முக்கிய அம்சமாகும். அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத் தரவுகளைப் புள்ளியியல் மென்பொருளால் பிரத்யேகமாகத் தயரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இதோ <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUX5KJNzV3GpOl1pAVLYO6lkLeno9gKR3A_85K4ZM3Gd-oHIgRewZzOUl9msdVGCNzHs0NpBE9AvZ3inzkHmlcoVx_OlbZHajQ6eHzNE0vbTjfnlSwWJgQMbuHnI9NIgspa_Sd-41ThBo/s1600/image.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUX5KJNzV3GpOl1pAVLYO6lkLeno9gKR3A_85K4ZM3Gd-oHIgRewZzOUl9msdVGCNzHs0NpBE9AvZ3inzkHmlcoVx_OlbZHajQ6eHzNE0vbTjfnlSwWJgQMbuHnI9NIgspa_Sd-41ThBo/s1600/image.png" /></a></div><a name='more'></a><br />
அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் வரிசையில் மு. கருணாநிதி(68366) -திமுக, சக்கரபாணி(65727) -திமுக, வேலுமணி(64041) -அதிமுக முதலியோர் உள்ளனர். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இழந்தவர் வரிசையில் ராதாபுரம் அப்பாவு(49) -திமுக, தொல்.திருமாவளவன்(87) -விசிக, திண்டிவனம் ராஜேந்திரன்(101) -அதிமுக முதலியோர் உள்ளனர். அதிக வாக்கு பெற்ற சுயேட்சை என்று பார்த்தால் திமுகவிலிருந்து விலகி போளூரில் போட்டியிட்ட ஏழுமலை(38861) முதல் இடத்திலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புதுக்கோட்டை சொக்கலிங்கம்(22973), மதிமுகவிலிருந்து விலகிய திருச்செங்கோடு முத்துமணி(5923) போன்றோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார்(4891), டிராபிக் ராமசாமி(1229) போன்றோர் குறிப்பிடத்தக்க சுயேட்சை வேட்பாளராவார்கள். <br />
<br />
முக்கிய வேட்பாளர்களின் பெயரில் அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சைகள் பலருள்ளனர். உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் பெயரில் இரு சுயேட்சைகளும், ஆலந்தூரில் ராமச்சந்திரன் என்ற பெயரில் மூவரும், காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் என்ற பெயரில் ஒருவரும், ஆத்தூரில் விஸ்வநாதன் பெயரில் ஒருவரும், நாகப்பட்டினத்தில் தாமீமுள் அன்சாரி என்ற ஒருவரும், ராசிபுரத்தில் துரைசாமி பெயரில் இருவரும் என பல இடங்களில் சுயேட்சைகள் களத்தில் உள்ளனர். மயிலாடுதுறை(1), பட்டுக்கோட்டை(1), கீழ்வேளூர்(1) ஆகிய தொகுதியில் மட்டுமே குறைந்த சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதிக சுயேட்சை வேட்பாளர்கள் கொண்ட தொகுதி என்றால் ஆர்கே நகர்(30), பெரம்பூர்(21), வேளச்சேரி(17) முதலியவையாகும். போளூர் தொகுதியில் தான் அதிகமாக 43538 வாக்குகள் மொத்தமாக சுயேட்சை வேட்பாளர்களுக்கு விழுந்துள்ளன. அதற்கடுத்த நிலையில் புதுக்கோட்டை(25804), திருச்செங்கோடு(11459) ஆகிய தொகுதிகளில் அதிகமாக வாக்கு விழுந்துள்ளது.<br />
<br />
தமிழ்நாட்டில் குறைவான வாக்குகள் பதிவான தொகுதியாகத் துறைமுகம் தொகுதியுள்ளது. அதிக வாக்கு பதிவான தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது அங்கேதான் இரு பிரதானக் கட்சி வேட்பாளரும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஆனால் அதிமுகவின் பலமான தொகுதியாக ஆர்கே நகரும், பலவீனமான தொகுதியாக விளவங்கோடும் உள்ளது. திமுகவின் பலமான தொகுதியாக ஒட்டன்சத்திரமும், பலவீனமான தொகுதியாக எடப்பாடியும் உள்ளது. சுயேட்சைகளுக்கு அதிகமாக வாக்குப் பதிவான தொகுதி போளூரும், குறைவான வாக்குகளே பதிவான தொகுதி கீழ்வேளூருமாகும். சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 2419 நோட்டோ வாக்குகள் விழுந்துள்ளன. நோட்டோ ஓட்டு மொத்தமாக 1.3% வாங்கினாலும் அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரத்தில் 2.8 சதவீதமும், குறைவாக உளுந்தூர்பேட்டையில் 0.36 சதவீதமும் பெற்றுள்ளது.<br />
<br />
<br />
<b>அதிமுக கூட்டணி</b><br />
பெரும்பான்மை பெற்ற அதிமுக கூட்டணி 92 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும், 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. விளவங்கோட்டில் மட்டும் நான்காம் இடத்திற்குச் சென்றுள்ளது. 46 தனித் தொகுதிகளில் 31 தொகுதி வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி அல்லாமல் நேரடியாகத் திமுகவுடன் 174 தொகுதியில் போட்டியிட்டு 88 தொகுதியில் வென்றுள்ளது. இதில் 1சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் பத்து, இழந்த தொகுதிகள் எட்டு. ஆர்கே நகர், குமாரபாளையம், தொண்டாமுத்தூர், உசிலம்பட்டி,சோழவந்தான், முசிறி, ஆண்டிப்பட்டி, மேலூர், சேலம் தெற்கு ஆகிய 9 தொகுதிகளில் 50 சதவீததிற்கும் அதிகமாக ஆதரவு பெற்றுள்ளது. மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இல்லாமல் வென்றுள்ள ஒரே தொகுதி காட்டுமன்னார்கோயிலாகும்.<br />
<br />
<b>திமுக கூட்டணி</b><br />
98 தொகுதிகளில் முதலிடத்தையும், 130 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும், 4 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் திமுக கூட்டணி பிடித்துள்ளது. குறைந்தபட்சம் 22.6% மேல்தான் அனைத்துத் தொகுதியிலும் பெற்றுள்ளது. அதில் 50% மேல் வாக்கு பெற்ற தொகுதிகள் மட்டும் 15 ஆகும். திருவாரூர்,ஒட்டன்சத்திரம், பத்மனாபபுரம், திருவண்ணாமலை, கொளத்தூர், திருக்கோயிலூர், திருப்பத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் இருபது சதவீததிற்குமேல் வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை நேரடியாக திமுக வென்றுள்ளது. அதிமுகவுடன் நேரடியாகப் போட்டியிட்டு 86 தொகுதியில் திமுக வென்றுள்ளது.<br />
<br />
<b>பாமக</b><br />
துறையூர் மற்றும் ராமநாதபுரம் தவிர அனைத்துத் தொகுதியிலும் வேட்பாளர்களைக் கொண்டுள்ளது. பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் பாமக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 68 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 100 தொகுதிகளில் ஐந்தாவது இடத்திற்கும் கீழே சென்றுள்ளது. 18 தொகுதிகளில் டெபாசிட் இழக்கவில்லை. 10 தொகுதிகளில் 20% மேல் வாக்குப் பெற்றுள்ளது மேலும் 33 தொகுதிகளில் 10% மேல் வாக்குப் பெற்றுள்ளது. 122 தொகுதிகளில் 2% குறைவாக வாக்குப் பெற்றுள்ளது. பாமகவின் பலமான தொகுதி பாப்பிரெட்டிப்பட்டியும், பலவீனமான தொகுதியாக திருச்சுழியும் உள்ளது. தேர்தலுக்கு முன்பே கோபிச்செட்டிபாளையப் பாமக வேட்பாளர் கட்சி மாறினாலும் 1045 வாக்கு பெற்றுள்ளார்.<br />
<br />
<b>பாஜக கூட்டணி</b><br />
பென்னாகரம், கோவில்பட்டி தவிர அனைத்துத் தொகுதியிலும் இக்கூட்டணி வேட்பாளர்களைக் கொண்டுள்ளது. கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 32 தொகுதிகளில் மூன்றாம் இடம், 69 தொகுதிகளில் நான்காம் இடம் பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் அடிப்படையில் நாகர்கோவில், வேதாரண்யம், குளச்சல்,விளவங்கோடு, கோவை தெற்கு, கிள்ளியூர், பத்மனாபபுரம் ஆகியவை மட்டுமே 16.6% மேல் வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழக்கவில்லை. பத்மனாபபுரம், தி.நகர், ஓசூர், துறைமுகம், விருகம்பாக்கம், மதுரை தெற்கு ஆகியவை 10% மேல் வாக்குகளைப் பெற்றுள்ளன. 131 தொகுதிகளில் 2% குறைவாக வாக்கு பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகமாக நாகர்கோவிலும், குறைவாக உத்திரமேரூரிலும் உள்ளது.<br />
<br />
<b>தேமுதிக கூட்டணி</b><br />
தளி மற்றும் காட்டுமன்னார்கோயில் இரண்டாம் இடமும், 112 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 105 தொகுதிகளில் நான்காம் இடமும் தேமுதிக கூட்டணி பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள தொகுதிகளில் ஐந்து தொகுதியில் மட்டுமே 15 சதவீதற்குமேல் வாக்குகளைப் பெற்றது. மேலும் மதிமுகவின் கோவில்பட்டி, இடதுசாரியின் தளி, திருத்துறைப்பூண்டி, விடுதலைச் சிறுத்தையின் காட்டுமன்னார்கோயில், அரூர், புவனகிரி என மொத்தமாக ஆறு தொகுதிகளில் டெபாசிட் தொகை இழக்கவில்லை. மொத்தமாகப் பார்த்தால் 15 சதவீதற்குமேல் 8 தொகுதியும், 10-15 சதவீதத்தில் 20 தொகுதியும், 5-10 சதவீதத்தில் 87 தொகுதியும், 2-5 சதவீதத்தில் 107 தொகுதியும், 2 சதவீதத்திற்கும் குறைவாக 10 தொகுதியில் மட்டுமே இக்கூட்டணி பெற்றுள்ளது. தேமுதிக மட்டும் போட்டியிட்ட தொகுதிகளில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்ற தொகுதிகள் ஏழு மட்டுமே. 112 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 105 தொகுதிகளில் நான்காம் இடமும் பெற்றுள்ளது. எந்தத் தொகுதியிலும் ஐந்தாம் இடத்திற்கு கீழே செல்லவில்லை. எனவே பாஜக, பாமக உடன் ஒப்பிட்டளவில் பரவலாக வாக்கு வங்கி இக்கூட்டணிக்கு இருந்தாலும் வெற்றி பெற போதியளவிற்கு இல்லை. 230 தொகுதியில் நின்று பாமக சராசரியாக 10003.36 வாக்கு பெற்றுள்ளது. 103 தொகுதியில் நின்று தேமுதிக சராசரியாக 10042.56 வாக்கு பெற்றுள்ளது. <br />
<br />
<b>நாதக</b><br />
திருப்பரங்குன்றம், உடுமலைபேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இல்லை. ஒரு சதவீதத்திற்கும் மேல் வாக்கு வாங்கிய தொகுதிகள் 101 அதில் இரண்டு சதவீதத்திற்கு மேல் வாக்கு வாங்கியுள்ள தொகுதிகள் 18 ஆகும். கடலூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் 3% மேல் ஆதரவு உள்ளது. தளி தொகுதியில் தான் நாம் தமிழர் கட்சி மிகக்குறைந்த ஆதரவு சதவீதத்தைக் கொண்டுள்ளது. 15 தொகுதிகளில் நான்காம் இடம், 77 தொகுதிகளில் ஐந்தாம் இடம், 81 தொகுதிகளில் ஆறாம் இடம் பெற்றுள்ளது.<br />
<br />
<br />
ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு, தலா ஐந்து தொகுதிகளில் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளது. ஜான் பாண்டியனின் மக்கள் முன்னேற்றக் கழகம் 50 தொகுதிகளில் போட்டியிட்டு, திருவாடனையில் நான்காவது கட்சியாக வந்துள்ளது. சூப்பர் நேஷன் பார்ட்டி என்ற கட்சி ஆம்பூரில் மட்டும் போட்டியிட்டு மூன்றாம் இடம் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 156 இடங்களில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் ஐந்தாவது கட்சியாக வந்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட்டு நெய்வேலியில் மட்டும் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. நெய்வேலியில் திமுகவிடம் 17791 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது அதிமுக. ஆனால் அதிமுகவில் கூட்டணி வாய்ப்பில்லாத வேல்முருகன் இத்தொகுதியில் 30000க்கு மேல் வாக்கு வாங்கியுள்ளார். அதேபோல அனைத்திந்திய பார்வர்டு பிளாக் நாங்குநேரியில் காங்கிரசின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. 28 தொகுதிகளில் போட்டியிட்டு ராயபுரத்தில் மட்டும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.<br />
<br />
<br />
<b>ஓட்டுப் பிரிப்பு.</b><br />
23 தொகுதிகளில் வெற்றிக்கான வித்தியாசத்தைவிட நோட்டோ உட்பட மற்றவர்கள் குறைவாகவே வாக்கு வாங்கியுள்ளனர் அதனால் ஓட்டுப் பிரிப்பு நடக்க வாய்ப்பில்லை. மீதியுள்ள 209 தொகுதிகளிலும் ஒருவகையில் வாக்கு சிதறினாலும் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று கொள்ளமுடியாது. ஆனால் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட மூன்றாவது இடத்தைப் பிடித்த கட்சி அதிக வாக்குப் பெற்றால் அது கட்டாயம் வெற்றியைத் தீர்மானிக்கும். அவ்வகையில் 129 தொகுதிகளில் மூன்றாம் இடம் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. பல முனை போட்டி என்பதால் நான்காவது இடத்தையும் கணக்கில் கொண்டால் கூடுதலாக 42 தொகுதிகள் இவ்வகையில் வருகின்றன. ஜனநாயக நாட்டில் ஓட்டுப் பிரியும் என்று பல முனை போட்டியை எதிர்க்கத் தேவையில்லை ஆனால் அதற்கேற்ப தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும்.<br />
<br />
தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், விஜய பாரத மக்கள் கட்சி என மொத்தம் 92 கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளன. சுயேட்சையாகப் போட்டியிட்ட இந்து மக்கள் கட்சி போன்றவை, சிவசேனா சின்னத்தில் நின்ற அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போன்றவை என வெளிப்படையாகத் தெரியாத கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளன. மேலும் இத்தேர்தல் முடிவுகள் பற்றிய புள்ளிவிவர ஆய்வு அறிக்கை <a href="https://docs.google.com/spreadsheets/d/17uyrpva6xa7xNhgvx58GS_ocbAOU4JOwmIoVrDLYnA0/pubhtml" rel="nofollow">இங்கே</a><br />
<br />
<br />
<a href="http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30903-2016-3" rel="nofollow">கீற்று இதழுக்காக</a> எழுதிய கட்டுரை<br />
<br />
</div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-68885067754237757222015-12-21T23:23:00.001-08:002016-01-07T01:22:27.569-08:00இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்களும் ஒரே மாதிரியான கட்டணமும், வேகமும், அனுமதியும் வேண்டும் என்பதாகும். இது சில நாடுகளில் சட்டவடிவமாகவும் உள்ளது. ஆனால் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் இணையச் சமநிலை என்பது இலவச பயனுருக்கள் மற்றும் இலவச இணையத்தளங்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுகிறது. அதாவது பணமிருப்பவர்கள் தங்கள் இணையத்தளத்தை முன்னிறுத்தி மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதாகக் கூறி, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகக் காட்டப்படுகிறது. ஆனால் சாமானியரின் பார்வையில் பெருநிறுவனங்கள் தங்கள் இணையத்தளத்தை இலவசமாக வெளியிட அனுமதிக்கக்கூடாது என்ற வாதமாகப் பார்க்கப்படுகிறது. இலவசம் கொடுப்பதும் அதை மற்றவர் எதிர்ப்பதும் வணிக நிகழ்வுகள் தான். ஆனால் வணிகத் தந்திரங்களுக்கு ஆட்படும் முன் உண்மையில் இணையச் சமநிலை என்பது எது என்று புரிந்துகொள்ள வேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVZiQWT1fiBgeyeXKuLpkSde5Zrd3CoSLIPi4UimTwusfcoouYm2kuMH0ogIsVEOdHYYGoPeVzi3BCPhEjR3Aw9Ws1nCihCQca-XVI98uU1oQizRUv-DqzzYAf55fRkeJSR6eudunJaUE/s1600/free+basics.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="195" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVZiQWT1fiBgeyeXKuLpkSde5Zrd3CoSLIPi4UimTwusfcoouYm2kuMH0ogIsVEOdHYYGoPeVzi3BCPhEjR3Aw9Ws1nCihCQca-XVI98uU1oQizRUv-DqzzYAf55fRkeJSR6eudunJaUE/s400/free+basics.png" width="400" /></a></div><br />
<a name='more'></a><br />
முதலில் இணையச் சமநிலை தோன்றிய வரலாற்றை அறியவேண்டும் அது தொலைப்பேசி காலம்தொட்டே தொடங்குகிறது. முன்பு தங்களுக்கு இணக்கமான நிறுவனங்களின் அழைப்புகளை வேகமாக வழங்கியும், போட்டியாளர்களின் அழைப்புகளைக் காலம்தாழத்தியும் வழங்கப்பட்டது. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்றொரு நிறுவனத்திற்கு வழிமாற்றியும் பாரபட்சம் காட்டப்பட்டது. தொழிற்நுட்பம் வளரவளர இணையத்தளங்களுக்கும் இம்மாதிரி பாரபட்சம் காட்டப்பட்டு, சில இணையத்தளங்களைத் தடைசெய்தோ, காலம்தாழ்த்தியோ, கட்டணம் அதிகரித்தோ ஒரு நிறுவனத்திற்குச் சாதகமான சிலர் செய்தனர். இதனால் சமமான வாய்ப்புகளின்றி பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அந்த வர்த்தகச் சமநிலையின் பொருட்டே இணையச் சமநிலை விவாதிக்கப்பட்டு வெளிப்படையான அணுகுமுறைகளை வகுத்துச் சமமான வாய்ப்பை உறுதிசெய்தனர். இங்கே சமவாய்ப்பு என்பது நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறையைத் தவிர வேறில்லை. ஒரு கோடி லாபமீட்டும் நிறுவனத்திற்கும் ஒரு ஆயிரம் லாபமீட்டும் நிறுவனத்திற்கும் ஒரே மாதிரியான வரிச்சட்டம் சாத்தியமில்லை. ஆனால் அது வெளிப்படையாக இருக்கவேண்டும். அதுபோல இணையச் சமநிலை என்பது மறைமுகமாகப் பாரபட்சம் காட்டப்படுவதைத் தான் குறிக்குமே தவிர ஆரோக்கியமான போட்டிச் சூழலை அல்ல.<br />
<br />
அப்படி என்ன இங்கு நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்துடன் சேர்ந்து ரிலையன்ஸ் கொண்டுவந்த இண்டர்நெட்.ஆர்க் திட்டத்தில் பேஸ்புக் உட்பட 33 வலைத்தளங்கள் இலவசமாக வழங்கியது. முன்பு ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் ஜீரோ என்ற திட்டத்தின்கீழ் சேரும் நிறுவனங்களின் தளங்களைக் கட்டணமின்றி பயன்படுத்தும் வசதியைக் கொண்டுவந்தது. இப்போது பேஸ்புக் பிரிபேசிக்ஸ் என்ற திட்டத்தைக் கொண்டுவர மக்கள் ஆதரவைக் கேட்கிறது. இதற்குப் பல்வேறு விமர்சனங்கள் வந்தன அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இலவசமாகக் கிடைக்கும் தளங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பிற நிறுவனத் தளங்களுக்குக் கட்டணம் கட்டி பயன்படுத்தமாட்டார்கள். இதனால் சிறு தளங்கள் பாதிக்கும் என்ற வாதமுண்டு. இது எப்படியுள்ளதெனில் யாரேனும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து நலத்திட்ட உதவி செய்தால் இனி கிராமத்தினர் வேலைக்குப் போகமாட்டார்கள் என்பது போலவுள்ளது. மனத்தடங்களுக்காகப் பெரிய திட்டங்களைத் தடைபோடமுடியாது. செலவில்லாமல் பலருக்கு இணையம் கிடைக்கிறது என்றால் அதை வரவேற்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டிக் கொண்டு விலையில்லாமல் பத்திரிகை வெளியிடுகிறோமோ அதுபோல இதுவொரு வணிகயுக்தி.<br />
<br />
இரண்டாவது வாதம், இதனால் சிறுநிறுவனங்கள், தொழில்முனைவோர் இணையத்தில் பணம் செலவழிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாகும். இதுவொருவகை வினோதமான வாதம். இணைய அங்காடிகள் மூலம் பொட்டிக்கடைகளையும், சிறுவியாபாரிகளையும் பாதிப்பதாகச் சொல்லும் போது இதே நிறுவனங்கள் சொல்லிய பதில்தான் இதற்கான பதிலும்கூட. திறமையும், தகுதியும் இருக்கும் போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எல்லாவற்றுக்கும் மேல் செலவுகளைக் குறைக்கும் வழியைத் தேடுவதுதான் வளர்ச்சிக்கான பாதை. வெளிப்படையான நிர்வாகத்தை அமைக்க முயலலாமே தவிர போட்டிக்கான சூழலை ஒழிக்கக் கூடாது. <br />
<br />
மூன்றாவது வாதம், சிலதளங்களை முன்னிலைப்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதாகும். இணையத்தில் கருத்துக்களைப் பகிரும் சமூகத் தளங்கள் மட்டுமல்ல விற்பனை, தொழிற்நுட்பம், வங்கிப்பணி போன்ற இதர தளங்களும் உள்ளன. சில செய்தித்தாள்கள் இணையத்தில் விலையில்லாமல் கிடைப்பதால் அது மற்ற தாள்களின் கருத்தைத் தடைசெய்வது என்பதில்லையே. இதில் கருத்துச் சுதந்திரம் பறிப்பதாகச் சொல்வது அபத்தம். இத்திட்டத்தில் இலவசமாகக்கிடைக்கும் சமூகத்தளத்தில் அதை விமர்சித்தும் எழுதலாமே. மாறாக, கோடிகளில் சம்பாரிக்கும் தளங்களிடையே நடக்கும் போட்டியை ஏன் தடை செய்யவேண்டும்? இதன் மூலம் எத்தனைப் பேர் அடிப்படை இணையவசதியைப் பெறுவார்கள் மற்றும் இதன் மூலம் இணையச் செலவு குறையும் என்று என்னும் போது இதுவொருவகை தகவல்புரட்சிதானே? இத்திட்டங்களை எதிர்ப்பதற்கு முன் இவ்வசதிகளை மக்கள் பெற என்ன முயற்சி எடுத்தோம் என்றும் யோசிக்கவேண்டும்.<br />
<br />
அடுத்த வாதம், இலவசமாகக் கொடுத்தால் அனைத்துத் தளங்களையும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காதே என்பதாகும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம், இலவச நூலகமே இல்லாத ஓர் ஊரில் நீங்கள் மக்கள் கல்வி/விழிப்புணர்வு அடைய நூலகம் ஒன்றைக் கட்டி இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள். அங்கே உங்கள் பார்வையில் சிறப்பான நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிப் போடுகிறீர்கள். அப்போது ஒரு குழு எல்லா இதழ்களையும் சமமாக வாங்கிப் போடாவிட்டதால் எதிர்ப்போம் என்று கிளம்பினால் என்ன செய்வீர்களோ அதுதான் இன்றைய நிலை. தனியார் இலவசத் திட்டங்கள் அனைத்துத் தளங்களையும் தராவிட்டால் எதிர்ப்போம் என்பதாகும். அனைத்துத் தளங்களையும் இலவசமாகத் தருவதில் உள்ள நடைமுறை செலவுகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். முன்பு விக்கிப்பீடியாவை இலவசமாக ஒரு நிறுவனம் கொடுத்த போது ஆதரித்துவிட்டு, இன்று அதைப்போன்று இன்னொரு திட்டத்தைக் கண்டபின்னர் எதிர்ப்பது முரணில்லையா? தொடர்ந்து கல்வி தொடர்பான தளங்களை அரசு விலையில்லாமல் வழங்கக் கோருவதையும் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது என்று சொன்னால் அப்படிப்பட்ட கொள்கை வேண்டுமா என யோசிக்க நேரும். <br />
<br />
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணத்திற்காக இலவச இத்திட்டத்தில் சேராத இணையத்தளங்கள் தடுக்கப்படலாம் என்ற வாதமுண்டு. உண்மையில் சேராத தளங்களால் தான் பயனர்களின் கட்டண வருவாய் கிடைக்கிறது. இருந்தாலும் அத்தளங்கள் அந்நிறுவனத்தால் தடுக்கப்படுமென்றால் மற்றொரு நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ளலாமே. இறுதியான ஒரு வாதம், இதன் மூலம் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு கட்டணம் விதிக்கப்படலாம் எனவே முக்கிய தளங்களுக்குக் கட்டணம் அதிகரிக்கும் என்பதாகும். இது ஒரே நிறுவனமென்றில்லாமல் பல்வேறு போட்டிகள் கொண்ட வர்த்தகச் சுழலில் இது சாத்தியமில்லை. குறுந்தகவல் கட்டணம் அதிகமான போது இலவச பயனுருக்கள் உதவவில்லையா? வெளிநாட்டுக்கான தொலைப்பேசிக் கட்டணம் அதிகமான போது இணையம் வழி பேசவில்லையா அதுபோல புதிய நிறுவனங்கள் இப்போட்டிக்கு ஈடு கொடுத்து புதிய வசதியைக் கொண்டுவரும். இருந்தாலும் அனைத்துத் தகவல்தொடர்பு நிறுவனங்களும் சேர்ந்து கட்டணங்களை உயர்த்தி புதிய நிறுவனங்களை வரவிடாமல் தடுத்தால் என்ன செய்ய என்றால், கட்டணங்களைக் கட்டுப்படுத்தவும், ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தவும் சட்டம் கொண்டுவரலாம். ஆனால் இலவச சேவையைத் தடுக்கக் கூடாது. <br />
<br />
எப்படி மிஸ்ட் கால் கொடுத்து பிற நிறுவனத்தின் செலவில் விலையில்லாமல் தொலைப்பேசிகளில் பேசுகிறோமோ அல்லது டோல் ஃப்ரி எண்ணில் பேசுகிறோமோ அல்லது இலவச டோர்டேலிவரி மூலம் வாங்குகிறோமோ அதுபோலவே இதையும் பார்க்கவேண்டும். இலவசமாக அதாவது பயனர்களின் கட்டணத்தை ஏற்றுக் கொண்டு ஒரு நிறுவனத்தால் விலையில்லாமல் ஒரு இணைய சேவையைத் தரமுடிந்தால் அது பயனுடையதே. தகவல்தொடர்பு நிறுவனங்களின் இலவச இணைய சேவையை இப்படி எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இணைய நிறுவனமான கூகிள் தகவல்தொடர்புத் துறையில் காலூன்றி இலவச இணைய சேவையை அளிக்க முயன்று வருகிறது. வருங்காலத்தில் மனிதர்களை இணைப்பது இணையம் என்பதால் கட்டணமில்லாச் சேவைகள் தான் அதிகரிக்கும். பல நாடுகளில் இத்தகைய கட்டணமில்லா இணையச் சேவை பயன்பாட்டில் உள்ளதையும் கவனிக்க வேண்டும். எப்படி அரசுத் தொலைக்காட்சி கட்டணமின்றி செயல்படுகிறதோ அதைப்போல நாளை அரசுசார்ந்த இணையத்தளங்கள் இலவசமாக மக்களுக்குத் தரப்படலாம் (தரவேண்டும்) அதுபோன்ற திட்டங்களை எதிர்க்கும் நெட் நியூட்ராலிட்டி வேண்டாம் அதேவேளையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்து, மறைமுகப் பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நெட் நியூட்ராலிட்டிதான் வேண்டும் என்போம்.<br />
<br />
<a href="http://puthu.thinnai.com/?p=28968" rel="nofollow">திண்ணை இதழுக்காக</a> எழுதிய கட்டுரை</div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-33173149363395809402015-06-13T16:40:00.001-07:002015-06-13T16:40:08.618-07:00சென்னையென்ன சுரண்டல் சமூகமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">சென்னையைத் தவிர பிறபகுதிகளில் பத்துமணி நேரம் வரை மின்தடையும், சென்னையில் சில மணிநேர மின்தடையும் நிலவிய வரலாறு கடந்தாண்டுகளில் நிகழ்ந்தன. சென்னையில் குடிநீர்ப்பிரச்சினைக்கு புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் என பெரியளவில் திட்டங்களைப் போட்டு எதிர்கொண்ட நாம் பிற பகுதிகளில் உள்ள ஏரிகளைத் தூர்வாராமலே விட்ட அவலமும் உண்டு. தேசியத் திட்டங்களின் போது தமிழகப் பிரதிநிதியாக சென்னை மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது, வந்து செல்லும் ரயில்கள் சென்னையுடனே குலாவுகின்றன. அனைத்து நலத்திட்டங்களும் சென்னையிலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறமாவட்டங்களில் இருந்து வேலைக்காக சென்னை நோக்கி வரும் இளைஞர் படை என்ன உணர்த்துகிறது? பிற மாவட்டங்களைவிட சென்னைதான் அதிகச் செல்வம் விளையும் இடம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. சென்னையும் அதன் புறநகர்ப்பகுதிகள் நீங்கலாக தமிழகத்தின் பிறபகுதிகள் அனேகமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxKpP08OJ8Nc1785eDH181Vk_TSggtStJpWcoqZfiEBI4WSm8cNADJV8_drgLZ-O54OjEPl7xx3E8w4k4fHn3XeeS-R6l0hYL4ULepXIqHiOTsbe_PVvtvIFlOKE0U6NpXdIieGTfwE3o/s1600/Chennai-Landmark.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxKpP08OJ8Nc1785eDH181Vk_TSggtStJpWcoqZfiEBI4WSm8cNADJV8_drgLZ-O54OjEPl7xx3E8w4k4fHn3XeeS-R6l0hYL4ULepXIqHiOTsbe_PVvtvIFlOKE0U6NpXdIieGTfwE3o/s320/Chennai-Landmark.jpg" /></a></div><a name='more'></a><br />
<br />
இது ஏறக்குறைய அனைத்து தலைநகரின் நிலை என்றாலும் இத்தகைய பொருளாதாரக் குவிவை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே நமக்குத் தேவை. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் ஒரு நிலத்தின் மதிப்பு அதிகமாகயிருப்பதற்குக் காரணம் தேவைகள் அதிகரித்திருப்பதே. தமிழகத்தின் அனேகப் பொருளாதார நகர்வும் சென்னையை மையமாகக் கொண்டுள்ளதால் அங்கே மக்கள்தொகை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே முதலீடு செய்த அல்லது வாழும் மக்கள் சந்தை விலையின் வளர்ச்சி விகிதத்தை மேலும் மேலும் உயர்த்தவே விரும்புவர், இதுவொருவகை செயற்கை விலையேற்றம் என்றாலும் ஒரு கட்டத்திற்குப் பின் சொத்துக்குமிழ் (Property bubble) உடைந்து நட்டப்படலாம் என்பது ஒரு புறமிருக்க இதனால் சென்னையில் வாடகைக்கு இருப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வடதமிழகப் பகுதியினரின் செல்வம் எளிதில் பெருக வாய்ப்பு கிடைக்கிறது. சில சதுரடியில் ஒரு இடம் இருந்தாலே அங்கே அடுக்குமனைகளைக் கட்டி வாடகைக்கு விட்டே எந்தத்தொழிலும் செய்யாமல் சென்னையில் வாழ்ந்துவிடலாம் என்ற நிலையுள்ளது. மேலும் மக்களின் தேவை அதிகரிப்பால் நுகர்வோர் எண்ணிக்கை பெருகி அதைக் கொண்டு பெரு நிறுவனங்கள் தண்ணீர் உட்பட பொருட்களை அதிகவிலையில் விற்று லாபம் ஈட்டுகிறார்கள்<br />
<br />
<br />
வணிகரீதியாகவும், பூகோளரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் சென்னையின் முக்கியத்துவம் அதனைத் தலைநகராக நிலைநிறுத்தினாலும் மற்ற ஊர்களும் முன்னேற்றப்பட வேண்டாமா? உண்மையில் தமிழகத்தின் அறிவுச்செல்வங்களும், அறிவுச்செல்வர்களும், அறிவுப்பண்பாடும் தமிழகத்தின் பிறபகுதியில்தான் அதிகம் காணமுடிகிறது. ஒவ்வொரு தலைமுறையாக இவர்கள் எல்லோரும் தலைநகருக்கு ஈர்க்கப்பட்டு வளர்ச்சியின் மையத்தில் குவியத் தொடங்குகிறார்கள். இன்று விரல்விட்டு எண்ணும் பெரிய ஆளுமைகள் எல்லாம் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். ஜனநாயகக்கடமையான வாக்கு சதவிகிதமும் பிற பகுதிகளைவிட சென்னையில்தான் குறைவு. இயற்கைவளங்களும் சென்னையில் குறைவுதான். ஆனாலும் மென்பொருள் நிறுவனங்களாக இருந்தாலும், மின்னணு நிறுவனங்களாக இருந்தாலும் சென்னைக்கு அருகேதான் அமைக்கப்படுகின்றன. இப்படி மீண்டும் மீண்டும் தொழில்வாய்ப்புகளை அதிகரித்து மக்கள்தொகையைப் பெருக்கி வளர்ச்சியின் பெரும்பங்கை இப்பகுதியே எடுத்துக் கொள்கிறது.<br />
<br />
<br />
<br />
காவிரிப் பாசன விவசாயிகள் கூட சென்னையில் போராட்டத்தை நடத்தினால் தான் கவனத்தைப் பெறுகிறார்கள். ராமேஸ்வரத்தில் பாதிக்கப்படும் மீனவர் சென்னைக்கு வந்துதான் நீதிகேட்க வேண்டியுள்ளது. ஆசிரியர், போக்குவரத்துப் பணியாளர்கள் என யாருடைய எந்தப் போராட்டம் என்றாலும் சென்னையைத் தொடாமல் அது மக்கள் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் வருவது அரிது. இதனால் சென்னைப் பகுதிசார்ந்த சமூகங்களின் வளர்ச்சி அதிகரிப்பால் இவர்களே உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள், தமிழகத்தின் அதிகார மையங்களும் இங்கிருந்தே பிறக்கின்றன, ஊடகங்களும் இவர்களை ஒட்டியே இயங்குகின்றன. கலைத் துறையும் இவர்களின் இருப்பிடமே. இதெற்கெல்லாம் முன்வைக்கப்படும் காரணங்கள் பெருநகரம், வணிகநகரம், தலைநகரம். உண்மைதான் ஆனால் அத்தகைய ஏற்றத்தாழ்வை உடைக்க வேண்டியது தானே ஜனநாயகமாண்பு. உணவு, கல்வி, சமூகநீதி என மக்களின் அனைத்து முக்கியத் தேவைகளும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டுள்ளதால் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கலைய வேண்டியதே நமது முக்கியப் பணியாகும்.<br />
<br />
<br />
<br />
ஒரு சுரண்டல் சமுகமாக மாறுவதைத் தடுக்க வேண்டியதும் தற்போதைய தேவை. எல்லாவற்றிற்கும் சென்னைவாசிகள் என்றோ, ஆட்சியாளர்கள் என்றோ பலி சுமத்த முடியாது. அனைவரின் அறியாமையும் இதில் சேர்ந்தே உள்ளது. கொங்கு மண்ணோ, பாண்டி மண்ணோ, நாஞ்சில் மண்ணோ யாராயிருந்தாலும் சென்னையில் சொந்தமாகச் சொத்து வாங்கிவிட்டால் சென்னை மண் என்று மாறிக்கொள்வோம் என்பதை மறுக்க முடியாது. எனவே தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களைப் பொருளாதரரீதியாக சமநிலையில் அமைக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.<br />
<br />
<br />
<br />
அரசின் நிதியுதவிகளில் தொடங்கும் திட்டங்கள், நடத்தப்படும் கூட்டங்கள், முதலீடுகள் போன்றவற்றில் பிறபகுதிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். சென்னையில் நில உச்சவரம்புச் சட்டம், தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டம் போன்ற சொத்துச் சட்டங்களைக் கடுமையாக்கி விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். புதிய தொழிற் நிறுவனங்களுக்குச் சலுகையில் வழங்கப்படும் சிறப்புப் பொருளாதார மையங்கள் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அமைக்க வேண்டும். மதுரை, கோவை, திருச்சி போன்ற சென்னைக்கு அடுத்தநிலை தொழிற்நகரங்களை முன்னேற்ற போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அரசின் பல செயலகம், வாரியம், கிடங்கு, அமைப்பு போன்ற நிறுவனங்களின் அலுவல் தலைமையிடங்களை அத்துறைசார்ந்த பிற பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். பிறபகுதிகளின் இயற்கை வளங்களைக் காக்கவும் முறையாகப் பயன்படுத்தவும், நீர் மேலாண்மையைச் செம்மையாகச் செய்யவும் வேண்டும். சர்வதேச மாநாடுகளைப் பிற மாவட்டங்களில் நடத்தி சுற்றுலாத் துறையையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தன்னிறைவு கிராமத்தை முன்மாதிரியாக உருவாக்குவதன் மூலம் தொழிற்வாய்ப்புகள் பரவலாக்கப்படும். இப்படி அரசு எடுக்கும் முடிவுகள் அடுத்து தனியார் முதலீடுகளையும் பிறபகுதிகளுக்கு இழுத்துச் செல்லும். "வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை- நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை!" என்ற கண்ணதாசன் வரிகள் நிஜமாக்க முயல்வோம்.<br />
<br />
<br />
<br />
கீற்று <a href="http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27668-2015-01-09-06-53-22" rel="nofollow" target="_blank">இதழுக்காக</a> எழுதியது</div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-5160929010970960222015-04-17T18:25:00.000-07:002015-12-21T20:39:39.876-08:00இங்கு நெட் நியூட்ராலிட்டி ஒரு மாயை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
தற்போது பேசப்பட்டுவரும் முக்கிய விவாதமான இணையச் சமநிலை(Net neutrality) குறித்து வைக்கப்படும் ஒரு வாதம் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் ஒவ்வொரு கட்டணம் இனி சுதந்திரமாக இணையத்தளத்தில் பயன்படுத்தமுடியாது என்பதாகும். இதை இணையநுட்பம் அறிந்தவர்களே நம்பும் போது சாதரண மக்களுக்கு இது சாத்தியமா என்று தெரியவாய்ப்பில்லை. இணையம் ஒரு வலைப்பின்னல் இதில் ஒன்றை மட்டும் தடுப்பதென்பது அவ்வளவு எளிதில்லை ஆனால் ஒன்றை முன்னிலைப் படுத்தலாம். எத்தனையோ முறை பலநாட்டரசுகள் பல தளங்களை முடக்கக் கோரினாலும் மீண்டும் மீண்டும் அவை முளைத்த வரலாற்றை நாம் பார்க்கலாம். ஒரு வலைத்தளத்தை அந்த முகவரி இட்டுத்தான் படிக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு செய்தியோடை (RSS) படிப்பான் மூலமோ, பிரதி தளங்கள் (proxy) மூலமோ எனப் பலவழிகளுள்ளன ஏன் கூகிள் தேடலில் உள்ள cached கோப்பு மூலமே படிக்கமுடியும். அப்படியிருக்கையில் எதைக் கட்டுப்படுத்த முடியுமெனில் இதர மல்டிமீடியா சேவையான காணொளிகள், குறுஞ்செய்தி தூதர்கள், ஐ.பி.தொலைப்பேசிகள் போன்ற தொலைத்தொடர்புத் துறை வருமானத்தைப் பாதிக்கும் வசதிகளை மட்டும்தான். இதற்குப் பெயர் ஓடிடி சேவை(OTT Service). இதில் கருத்துச் சுதந்திரப் பறிப்போ, சமநிலை பாதிப்போ தலையிடுவதில்லை. பிரஞ்சு, தாய்வான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இத்தகைய சேவையைத் தரும் இணையத்தளங்களைத் தகவல்தொடர்பு நிறுவனமாகக் கருதுகின்றனர். சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இதற்கு இணையக் கட்டண வேறுபாடுகள் உள்ளன. வியட்நாம் போன்ற இன்னும் சில நாடுகள் இவற்றைத் தடைசெய்யவும் முயல்கின்றனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieoPpwyUE3oVtwhYmuAwOBX9rj7yp5YUc202g-ndeJovx9UlvjAhGXb1QMXtL0viWu1Q5NirHiAuG7xP4b3kPxWlSV0VAWR6aCoPCpy1uCn_Xh6_A3Jp06RNMsAnIIJqW7emObbFs0c-E/s1600/netneutrality.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieoPpwyUE3oVtwhYmuAwOBX9rj7yp5YUc202g-ndeJovx9UlvjAhGXb1QMXtL0viWu1Q5NirHiAuG7xP4b3kPxWlSV0VAWR6aCoPCpy1uCn_Xh6_A3Jp06RNMsAnIIJqW7emObbFs0c-E/s400/netneutrality.png" /></a></div><a name='more'></a><br />
உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதிவாங்கி வரிகட்டி நீங்கள் ஒரு கடை வைத்து, அதிகாலையில் சென்று காய்கறி மூட்டைகளைச் சரக்குவண்டியில் எடுத்துவந்து 10% லாபத்தில் ஒரு காய்கறிக்கடை நடத்துகிறீர்கள். நீங்கள் விற்றுவரும் அதே பொருட்களை ஒரு பெருநிறுவனத்தால் மொத்தக்கொள்முதல் மூலம் 5%லாபத்தில் விற்க முடியும். அப்படி இணையத்தில் வர்த்தகம் மூலம் காய்கறிகளை இலவச இல்லம் சேர்ப்பு(door delivery) என்றும் சொல்லி உங்கள் வாடிக்கையாளர்களைப் பிடித்துக்கொண்டால் உங்கள் நிலையென்ன? அந்தநிலையில்தான், இந்தியத் தந்திச் சட்டம் 1885ன்படி அனுமதிவாங்கி, அலைப்பேசி கோபுரங்கள் அமைத்து, அதன் வழியாக ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்புச் சேவையை அளித்துவரும் நிறுவனங்கள் உள்ளன. அதன் சேவையைப் பயன்படுத்திக்கொண்டு அதன் வருமானத்தைப் பறித்துக் கொண்ட ஓடிடி இணையத்தளங்கள் இந்நிலைக்குக் காரணம். ஒரு இடத்தை விவசாயம் செய்ய வேறொருவருக்குக் குத்தகைக்கு விடுகிறோம். அவ்வாறு குத்தகைக்கு வாங்கியவர் தனது விளம்பரப் பலத்தால் அதிகவிலைக்கு வேறொருவருக்கு மறுகுத்தகைக்கு விட்டு லாபம் எடுத்தால் நாம் சும்மாயிருப்போமா? நமது வருமானம் பாதிக்கும் போது என்னநிலை எடுப்போமோ அதே நிலையில்தான் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுத்துள்ளன. அப்போது மறுகுத்தகைக்கு விட்டவர், தனது லாபத்தை உங்களுடன் பங்கிட்டுக் கொண்டால் வாங்கிக் கொள்வோமா அல்லது பழைய விலைக்கே கொடுப்போமா? அதாவது அப்படி லாபம் அடைந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இலவசமாகத் தங்களது தளங்களைத் தந்தால் வாங்கிக்கொள்ளாமல் இலவசத்தை எதிர்ப்பதன் நோக்கமென்ன?<br />
<br />
உண்மையில் இணையச் சமநிலை என்பது சுயசார்பாகச் சில தளங்களைத் தடைசெய்வதையும், ஆரோக்கியமான போட்டிச்சூழலை ஒழிப்பதையும் தான் குறிக்கிறது. அதிகமாகப் பலனடைபவர்களுக்கும், பலனடையாதவர்களுக்கும் ஒரே மாதிரி விலைவைப்பது சமநிலை அல்ல. தற்போது அமெரிக்காவில் FCCயிடம் (கட்டுப்பாட்டு அமைப்பு) கேட்கும் இணையச் சமநிலையும் இந்தியாவில் TRAIயிடம் கேட்கும் இணையச் சமநிலையும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அண்மையில் FCC வெளியிட்டுள்ள இணையச் சமநிலை குறித்தான விதிகளில், மூன்று விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. சட்டரீதியான தளங்களைத் தடைசெய்யக்கூடாது, அத்தளங்களுக்கான இணையப் போக்குவரத்தைச் சிதைக்கக்கூடாது, சில தளங்களை மட்டும் வேகமாகக் காட்டக்கூடாது என்பதாகும். இதற்குப் பெயர்தான் இணையச் சமநிலை, தரவுக் கட்டணமற்ற தளங்கள் இருக்கக் கூடாது என்பதல்ல. மேற்கூறிப்பிட்ட விசயங்கள் எல்லாம் (காசு வாங்கிக்கொண்டு) மறைமுகமாகச் செய்யக்கூடியவை என்பதாலேயே வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் விதத்தில் இணையச் சமநிலைச் சட்டம் இருக்கவேண்டும். அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளதால் அடையும் வருமானத்தை இலவசச் சேவையாகப் பங்கிட்டுக் கொள்ள சில பெருநிறுவனங்கள் முயல்கையில் எதிர்ப்பது தேவையற்றது. இலவசம் என்பது பொருளாதாரவுலகில் சாத்தியமில்லை ஆனால் தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியால் அடையும் பலனை இலவசம் என்று அழைத்துக் கொள்ளலாம்.<br />
<br />
ஒரு பயனராக விலைகள் ஏறும் போது எதிர்ப்பது நியாயமான நடவடிக்கை ஆனால் அந்த விலையேற்ற எதிர்ப்பைச் சுதந்திரப் போராட்டமாகக் கட்டமைப்பதுதான் இங்குப் பிரச்சினை. அப்படி சுதந்திரப் போராட்டமாக மாற்றி அதன் மூலம் வணிகப் பலனடைபவர்கள் பற்றி விழிப்புணர்வும் வேண்டும். உண்மையில் இத்தகைய சமநிலையை நடைமுறைக்கு ஏற்றுக்கொண்டுள்ளோமா? இணைய வர்த்தகத்தின் போதும் சிறு வியாபாரிகளுக்கோ, இணைய கைப்பேசி ரீச்சார்ஜால் பாதிக்கப்படும் ரீச்சார்ஜ் முகவர்களுக்கோ குரல் கொடுக்காமல் நகர்ந்த நாம் இன்று போராடத் தூண்டியது வணிகச் சூழ்ச்சியாக இருக்கலாம். அல்லது ஒருவகை வர்க்கசார்பு நடவடிக்கையாக இருக்கலாம். நெட் நியோட்ராலிட்டி வேண்டும் அது இலவசங்களைத் தடைசெய்யாமல் நியாயமான வெளிப்படையான கொள்கைக்காக வேண்டும். மேலும் FCCவிதியின் மற்றொரு அம்சமும் கவனிக்கத்தக்கது, செயல்பாடுகளின் அடிப்படையில் விலைநிர்ணயம் கூடாது என்பதாகும். அப்படியெனில் இரண்டு வாதம் மட்டுமே உள்ளன. ஒன்று TRAI கேட்கும் OTTன் கட்டணவிதிப்புக் கொள்கையைக் கைவிட்டு தரவுக் கட்டணமற்ற சேவைக்கு இது தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தவேண்டும். அல்லது OTT கட்டணவிதிப்பை அமல் செய்து, அக்கட்டணத்தை ஏற்கும் நிறுவனத்தளத்திற்கு விலக்கு தந்து வெளிப்படையான நிர்வாகத்தை அதாவது இணையச் சுதந்திரத்தை உறுதிசெய்யவேண்டும். இப்படி கட்டணச்சேவை வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள் ஆனால் தரவுக்கட்டணமற்ற தளங்கள் இச்சுதந்திரத்தைப் பாதிப்பவையல்ல என்பதே வாதம்<br />
<br />
சில தளங்கள் செலவற்றுக் கிடைப்பது கருத்துச் சுதந்திரப் பறிப்பல்ல. உங்கள் கருத்தை இப்படி இலவசமாகக் கிடைக்கும் பேஸ்புக்கில் கூட வெளியிடலாம். உங்கள் கருத்திற்கும் கட்டணத்திற்கும் தொடர்பில்லாத போது இது எப்படி கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கும்? freedom of speech என்பது கருத்துரிமையே தவிர இலவசத் தொலைப்பேசி உரையாடலல்ல. மக்கள் இதுவரை எப்படி பயன்படுத்தினரோ அப்படியே பயன்படுத்தலாம் அல்லது இலவசத் தளங்களை வாங்கிக்கொண்டு கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த இலவசத் திட்டம் எழைகளுக்கானது என்று சொல்வதால் எது வேண்டும் என்பது பயனர்களின் கையில்தான் உள்ளது. இலவசத்திற்கு அடிமையாகிப் பிற தளங்களைக் காசுகொடுத்துப் பார்க்கமாட்டேன் என்பது பயனர்களின் குறைதானே தவிர நிறுவனங்களில் குறையில்லையே. இருப்பவர்களை மட்டும் பார்க்காமல் இல்லாதவர்களுக்கு இணையம் என்ற ஒரு வசதிகொண்டு சேர்கிறது என்றால் அதை வரவேற்கவேண்டும். கடிகார முட்களை முன்னகர்த்திக் கொள்வதால் சூரியன் நமக்கு மட்டும் சீக்கிரமாக உதிக்காது. தரவுக் கட்டணமற்ற தளங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்குக் குரல் கொடுத்து இணையச் சமநிலையைக் காப்போம்.</div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-38212666114482647242015-01-13T16:37:00.001-08:002015-01-13T16:37:28.616-08:00விளம்பரப் பலகைக் கலாச்சாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பல்லாண்டு வாழ்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், நாளைய பிரதமரே, நாளையே இந்தியாவே எனப் பதாகை அடித்து, தெருவெல்லாம் நமது அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமையைக் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். இந்த அரசியல் ஒரு புறமிருக்க, திருமண வாழ்த்து விளம்பல், ரசிகர் மன்றப்புலம்பல், வீட்டுமனை விற்பனை அலம்பல், சோமபானக் கடை அறிவிப்புகள் என்று மறுபுறமும் பதாகை அடித்தே நாம் கொண்டாடுகிறோம். வளர்ந்த நாடுகளே வியந்துபோகும் அளவிற்கு நாம் சுவரொட்டி மற்றும் பதாகைத் துறையில் முன்னணியில் உள்ளோம். "இதெல்லாம் ஒரு பெருமையா" என்று நீங்கள் கேட்பது புரிந்தாலும் புரியவேண்டியவருக்குப் புரியவில்லையே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWEMuiETBVOZBzdlR8y_VVXMuLJlQ6Qy_yd5cTE04D8ZUXf1C-KUWRKAlkU2bSfZgSmIBUl-YXX2f2t3vMCNug-pEBm4YhQNYZeeB2xvFsLuuNVYoQ7cR9vNwIDCh0zmZXDuxfFt8FtMc/s1600/ad+holding.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWEMuiETBVOZBzdlR8y_VVXMuLJlQ6Qy_yd5cTE04D8ZUXf1C-KUWRKAlkU2bSfZgSmIBUl-YXX2f2t3vMCNug-pEBm4YhQNYZeeB2xvFsLuuNVYoQ7cR9vNwIDCh0zmZXDuxfFt8FtMc/s320/ad+holding.jpg" height="300" width="400" /></a></div><a name='more'></a><br />
<br />
அந்தப் பதாகை எல்லாம் நெகிழி வகை மக்காத குப்பையாக மாசுபடுத்தும் என்ற காரணத்தைக் கூட ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உருப்படியாக ஒரு செய்தியும் அந்தப் பதாகை நிச்சயமாகச் சொல்வதில்லை. அரசியல் என்றால் முக்கியப் புள்ளிகளின் படங்களும், கடைக்கோடி உறுப்பினர் பெயரும் இடம்பெறும், செய்தி என்று தேடிப்பார்த்தால் வாழ்த்துகிறோம் அல்லது வரவேற்கிறோம் அல்லது வணங்குகிறோம் என்ற ஒரே தொடர்கள்தான் சுற்றிச்சுற்றி தெரியும். இடையில் இலக்கணப் பிழைகள், இன்சியல் பிழைகள் எல்லாம் இருந்தால் பெருந்தன்மையாகப் பொறுத்துக் கொள்ளவேண்டும். அப்படியே சினிமாப் பதாகை என்றால் இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம் என்ற செய்திக்குப் பின்னும் முன்னும் செலவளித்த அத்தனை நபர்களின் படங்களும் இடம் பெற்றிருக்கும். தற்போது பல இளைஞர்க் குழுக்கள் கூட ஆங்காங்கே கூடிப்பேசி ஆட்கள் கூடுமிடங்களில் இரண்டு கரும்புப் படமும் ஒரு பொங்கப் பானைப்படமும் போட்டுவிட்டு சுற்றி பன்னிரண்டு நபர்களின் படங்களையும் போட்டு ஒரு வாழ்த்து விளம்பரப்பலகையை வைத்துவிடுகிறார்கள். விளம்பரங்களுக்கு நடுவில் வாழ்த்தைத் தேடிப்பிடித்து படித்து வாழ்ந்துவருகிறோம்<br />
<br />
இதெல்லாம் பிரச்சினையே இல்லை தான், ஆனால் அந்தப் பதாகையைக் குற்றுயிராக இருக்கும் தெருப் பெயர் பலகையை மொத்தமாக மறைத்தும், நல்ல சாலையைத் தோண்டி நாசப்படுத்தியும், சாலையோர நடைமேடையை ஆக்கிரமித்தும், சாலையோர நடைமேடைக் கல்லை உடைத்தும், பசுமையான மரக்கிளையை ஒடித்தும், முக்கிய வளைவுகளில் அதன் அடையாளைத்தையே மாற்றியும் கட்டப்படுகிறது. இதுவரை தெருச் சுவற்றில் மட்டும் விளையாடிய நாச வேலை தெருவெங்கும் அலங்கோலப் படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என்ற பாகுபாடே இல்லாமல் மின்கம்பம் தோறும் ஒரு பதாகை கட்டி சாலையில் கவனத்தைக் கெடுக்கிறது. இரவில் விளக்கிட்ட பலகையோ, பகலில் சூரிய ஒளிபட்ட பலகையோ வெளிச்சத்தைப் பிரதிபலித்து வாகன ஓட்டிகளையும் வில்லங்கத்தில் தள்ளுகிறது.<br />
<br />
ஏன் இந்த ஆடம்பரம்? கறுப்புப் பணத்தின் திருவிளையாடல் என்றாலும் அவரவர் இடங்களில் வைத்துக் கொள்வதில் சிக்கலில்லை ஆனால் பொதுவிடங்களில் பொதுச் சொத்தை அழித்து வைக்கும் போது கேள்விக்குள்ளாகிறது. இப்படிச் செலவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் என்றைக்காவது தொகுதியின் வரவு செலவு கணக்கைச் சின்னத் துண்டு பிரசுரத்திலாவது அறிவித்ததுண்டா? அல்லது சாலைப் பாதுகாப்பு, சுகாதாரம், மது ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு போல ஏதாவது விழிப்புணர்வுப் பதாகைதான் வைத்ததுண்டா? எத்தனையோ குடியிருப்புப் பகுதிகளில் சாலை பெயரே தெரியாமல் இருக்கும், அங்கெல்லாம் அப்பகுதியின் வரைபடப் பதாகையிட்டுப் புதியவருக்கு உதவலாம்; பேருந்து நிறுத்தத்தில் நைந்துபோன கூரையை அகற்றி கூரை அமைக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் துணிப் பதாகையாவது பயன்படுத்தலாமே. தோரணங்களால் பிறக்கும் பிரம்மாண்டம் தொல்லை கொடுக்கும், ஆனால் சேவையால் பிறக்கும் பிரம்மாண்டம் சேவிக்க வல்லது.<br />
<br />
<br />
சிறகு <a href="http://siragu.com/?p=12945" rel="nofollow" target="_blank">இதழுக்காக</a> எழுதியது</div>நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-60202484134806856012014-10-05T17:15:00.000-07:002014-10-05T17:15:07.778-07:00அரசு விருதுகளின் இன்றைய நிலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அவ்வப்போது சாதனையாளர்களுக்கு அரசு வழங்கும் பரிசு என்பது பெரிய கவுரவம் என்றாலும் பொதுவாக அரசால் வழங்கப்படும் விருதோ பரிசோ அரசியல் ஆதாயம் சார்ந்தது என்று பலரால் வர்ணிக்கப்படுவதுண்டு. கிரிக்கெட், சினிமா தவிர்த்து மற்ற துறைகளில் அரசால் அதிக பரிசுகள் வழங்கப்படுவதில்லை என்றும் கட்சிக்காரர்க்கோ, கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்க்கோ அரசியல் ஆதாயம் நோக்கி வழங்குவதாகவும் விமர்சிக்கப்படுவதுண்டு. இந்தி எழுத்து இருந்ததால் பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்றார் எம்ஜிஆர். ஆனால் அவர் மறைந்தவுடன் இந்தி எழுத்து கொண்ட பாரத ரத்னாவை நாம் வழங்கினோம். காலம் கடந்து வழங்கப்பட்ட விருது வேண்டாம் என்று பாடகர் ஜானகி மறுத்த வரலாறும் உண்டு. 1970களில் குடியரசுத் தலைவரும் பிரதமரும் ஒருவருக்கொருவர் பாரத ரத்னாவை பரிந்துரைத்து வாங்கிக் கொண்டதாகவும் விமர்சிப்பவர்கள் உண்டு. இப்படி அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்வில் கலை இலக்கியப் பரிசுகள் எத்தகையவை என்று பார்ப்போம்.<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDKa-1Vd0DJPYPSYaKsWVirTROjd1Bhs9Bnt2cjkWY1qwk65QwOZQfeLVcdTS3myHodDdYgUfHoUMj_crkHkhuPyo41afmsJoZC26ZfeU8ENsuXLcO_6YEpoLG_wIjYPKdna7YjI6WvrM/s1600/sahitya.JPG" imageanchor="1"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDKa-1Vd0DJPYPSYaKsWVirTROjd1Bhs9Bnt2cjkWY1qwk65QwOZQfeLVcdTS3myHodDdYgUfHoUMj_crkHkhuPyo41afmsJoZC26ZfeU8ENsuXLcO_6YEpoLG_wIjYPKdna7YjI6WvrM/s320/sahitya.JPG" height="400" width="333" /></a><br />
<a name='more'></a><br />
அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞர் என பதவியும், பல பரிசில் பணமும் கொடுக்கப்பட்டு படைப்பாளர்கள் ஆதரிக்கப்பட்டனர். விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரம், பாணரின் ஹர்ஷ சரித்திரம், காளிதாசரின் மேகதூதம் என அரசவைக் கவிஞர்களாலேயே உருவாக்கப்பட்டவை. தென்னிந்தியாவிலும் சங்கம் வைத்து இலக்கியம் வளர்க்க பொருளும், மதிப்பும் கொடுத்துவந்தது அரசர்களே. எண்ணற்ற புராதன கலைப் பொக்கிசங்கள் இந்நாட்டில் இன்று இருப்பதற்குக் காரணம் அந்நாளைய மன்னர்களின் கொடை என்பதை யாரும் மறுக்கமுடியாது. இடைக்காலத்திலும் சரி சுதந்திர போராட்டக் காலத்திலும் சிற்றரசர்களாலும் செல்வந்தர்களாலும் படைப்பாளிகள் ஆதரிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சுதந்திரம் அடைந்து மக்களாட்சி உருவான பிறகு மக்கள் பிரதிநிதிகளைவிட தனியார் மற்றும் பெரு நிறுவனங்களின் ஆதரவில்தான் படைப்பாளிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.<br />
<br />
<br />
இந்தியாவின் 22 ஆட்சி மொழி இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருதின் பண மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்; அடுத்தடுத்த நிலைகளுக்கான பரிசுகள் ஐம்பதாயிரம் இருபத்தைந்தாயிரம் என்று வழங்கப்படுகின்றன. அதுவும் 2009ம் ஆண்டுக்குப் பிறகே இம்மதிப்பு உயர்த்தப்பட்டது. ஆனால் தனியார் பங்களிப்பில் அதே மொழிகளுக்கு வழங்கப்படும் ஞானபீட விருதின் மதிப்போ 11 லட்ச ரூபாய் ஆகும். மற்ற அமைச்சகங்களின் மூலம் வழங்கப்படும் பரிசு தொகை என்பதும் சொற்பமாக இருந்துவருகிறது. ஆங்கில நாளிதழான இந்து வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசுத் தொகை 5 லட்சம். கே.கே. பிர்லா குழுமத்தின் மூலம் இந்திய மொழிகளுக்கு வழங்கப்படும் உரைநடை கவிதை நூலுக்கான சரஸ்வதி சம்மன் விருதோ 10 லட்சம் மதிப்பைக் கொண்டது. இப்படி அரசைவிட தனியார் பங்களிப்பே ஓங்கியுள்ளது.<br />
<br />
இறுதியாக தமிழ் மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பெற்ற பிறகு மத்திய அரசால் வழங்கிவரப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதான தொல்காப்பியர் விருதுடன் வழங்கப்படும் பண மதிப்பு ஐந்து லட்சம் மட்டுமே. தமிழக அரசின் பாரதியார் விருதின் மதிப்பு 2009க்குப் பிறகு தான் ஒரு லட்சம் மற்றும் 8கிராம் தங்கம் என்றானது; தமிழ்த்தாய் விருதின் மதிப்பு ஐந்து லட்சம்; உ.வே.சா விருதும், கபிலர் விருதும் தலா ஒரு லட்சம். தமிழ்நாடு அரசின் சிறந்த தமிழ் நூலுக்கான பரிசுத் தொகை என்பது 30000 ரூபாய்; இயல் இசை நாடக மன்றத்தின் சில கலை அமைப்புகளுக்கான பரிசோ 10000 என்று எண்ணிக்கை அளவில் சிறிய பொருளாதார மரியாதையே மாநில அளவிலும் வழங்கப்படுகிறது. சில துறைகளில் நுழைவுக் கட்டணம் என்று கணிசமான தொகையைக் கட்டியோ, சொந்தக் காசில் அச்சுப் பிரதிகளை அனுப்பியோதான் படைப்பாளிகள் விண்ணப்பிக்க வேண்டிய சூழலும் உள்ளது. அதற்குமேல் உள்ள அதிகார நகர்வுகள் தாண்டி அரசு வழங்கும் பரிசும் பணமதிப்பில் குறைவாக உள்ளது.<br />
<br />
<br />
மாறாக அரசு சார்பற்ற அமைப்புகளின் இலக்கிய/கலை பரிசுகள் அரசைவிட அதிகமான பணமதிப்பையும் கொண்டுள்ளது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, அறிவியல், கவின்கலை, தமிழிசை, வளர்தமிழ் ஆகிய துறைகளுக்கு தலா 1.5 லட்சம் மதிப்புள்ள விருதுகளை வழங்கிவருகிறது. மேலும் மதிப்புறு தகைஞருக்கு 2 லட்சமும், வாழ்நாள் சாதனையாளருக்கு 5 லட்சப் பணமதிப்பும் கொண்ட விருதும் வழங்கிவருகிறது. அண்மையில் கோலாலம்பூரில் கவிஞர் வைரமுத்து வாங்கிய டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அற வாரியத்தின் விருது 6 லட்சம் மதிப்பு கொண்டது. தினத்தந்தி வழங்கிவரும் அறிஞருக்கான விருதின் பணமதிப்பு 3 லட்சம், இலக்கியத்திற்கான பணமதிப்பு 2 லட்சமாகும். ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ராஜா சர் முத்தையா செட்டியார் அறக்கட்டளை, கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை, முத்துப்பேட்டை ரகமத் அறக்கட்டளை, பி.சுசீலா அறக்கட்டளை மற்றும் மேலும் வெளியில் தெரியாத பல இலக்கிய அமைப்புகள் வழங்கிவரும் விருதுகளின் பணமதிப்பு ஒரு லட்சம் என்பது சாதாரணமாக உள்ளது.<br />
<br />
<br />
எண்ணிக்கை அளவிலும், பணமதிப்பீட்டு அளவிலும் தனியார் பரிசுகள் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான சமூகச் சூழல்தான் ஆனால் அரசின் பரிசுகள் சார்புடனும், பணமதிப்பின்றியும் அமையாமல் பார்த்துக் கொள்வது காலத்தின் தேவை. 1960களில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட சில குற்றவியல் சட்டத்திற்கான அபராதத் தொகை இன்றும் பழைய மதிப்பில் ஆயிரங்களிலேயே உள்ளதென்பது நாடறிந்த உண்மை. அதுபோல இல்லாமல் அரசின் விருதுகள் காலத்திற்கேற்ப மதிப்புயர்த்தப் படவேண்டும். இலவசங்களை அள்ளிக்கொடுக்கக் கோரும் மக்கள், படைப்பாளர்களுக்குப் பரிசுகளையும் அள்ளிக் கொடுக்கக் கோரவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு. முதலாளித்துவச் சமூகத்தால் தான் படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள் என்ற நிலையில் இருந்து சமவுடமைச் சமூகத்தாலும் ஆதரிக்கப்படவேண்டும்.<br />
<br />
சிறகு இதழுக்காக <a href="http://siragu.com/?p=15206" rel="nofollow">எழுதிய கட்டுரை</a></div>
Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-71093917277549010032014-04-13T18:49:00.000-07:002014-04-18T21:14:55.923-07:00எம்.பி.க்களின் அனுகூலங்கள் என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">தேர்தல் அறிக்கையை நம்பியோ, தலைவர்களை நம்பியோ அல்லது ஏதோ சமூக நீதிக்காகவோ வாக்களிக்கிறோம். ஆனால் அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்குக் கிடைக்கப் போகும் அதிகாரங்கள் மற்றும் லாபங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அமைச்சர் பதவி கூட இல்லாமல் ஒரு சாதாரண உறுப்பினர் அனுபவிக்கும் அதிகாரங்கள் இதோ..<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQATo8QlQm8H8bRSmS9G7klKx6YEcQqtSs0DecDD5-22gZtm_XRAZXtwhcqZVEj3HQpqgQI4w7Ht2345bNTyg1GfiO1gxjPhSQoSyX0sv1ClzSNcldlB1y2FnbEejW41qD0Fe81_6M4uM/s1600/Parliament.jpg" imageanchor="1"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQATo8QlQm8H8bRSmS9G7klKx6YEcQqtSs0DecDD5-22gZtm_XRAZXtwhcqZVEj3HQpqgQI4w7Ht2345bNTyg1GfiO1gxjPhSQoSyX0sv1ClzSNcldlB1y2FnbEejW41qD0Fe81_6M4uM/s320/Parliament.jpg" height="468" width="640" /></a><br />
<a name='more'></a><br />
<b>எழுதப்பட்ட விதியின்படி:</b><br />
சரத்து 105ன் படி, பதவி சார்ந்த ஊழல் வழக்கு நீங்கலாக வேறு எந்த வழக்கு விசாரணைக்கும் நாடாளுமன்ற தலைவர் அனுமதியின்றி உறுப்பினரை உட்படுத்தமுடியாது.<br />
<br />
பாராளுமன்றத்திற்குள் இருக்கும் வரை கட்டுபாடற்ற பேச்சுச் சுதந்திரம் உண்டு. அவதூறு வழக்குகள் செல்லாது.<br />
<br />
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது மாநிலத்தின் தலைமைச் செயலரை விட அந்தஸ்து மிக்கது.<br />
<br />
அடிப்படை ஊதியம் 50,000, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள் மற்றும் பணிநிமித்தமான அலுவல் நாள் ஒன்றிற்கு 2000 படி ஊதியம். தொகுதி ஊதியம்(தொகுதி மேம்பாட்டு நிதி இல்லை) 45000 மற்றும் அலுவலக ஊதியம் 40,000 என மொத்தம் 1.5லட்சம் சராசரியான குறைந்தபட்ச மாத வருமானம் உள்ளது. இதற்கு வரிவிலக்கு முழுதும் உள்ளது.<br />
<br />
4,00,000 வரை வட்டியில்லாமல் ஊதியத்திலிருந்து முன்பணமும் வாங்கிக் கொள்ளலாம். அடுத்து, டெல்லியில் தங்குமிடம், தொலைபேசி, மின்சாரம், நீர், இணைய இணைப்பு, பராமரிப்புச் செலவு என்று சலுகைகளும் உண்டு.<br />
<br />
அதுபோக தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்துசெல்லும் சாலைவழி, ஆகாயவழி, நீர்வழி என்று பயணச் செலவும் வாங்கிக் கொள்ளலாம். பதவியில் இருக்கும் வரை ரயிலில் இந்தியாவிற்குள் எங்கு வேண்டும் என்றாலும் அளவில்லாத முறை முதல்தர பயணம் செல்லலாம்.<br />
<br />
ஒருநாள் பதவியிலிருந்தாலும் வாழ்நாள் முழுதும் ஓய்வுதியம் 20,000 ஆகும். மொத்தம் ஐந்தாண்டுகள் தாண்டியும் பதிவியிலிருந்தால் ஒவ்வொரு ஆண்டிற்கும் 1500 ரூபாய் கூடுதல் ஓய்வுதியம் பெறலாம்.<br />
<br />
உத்தியோகப்பூர்வ வெளிநாட்டிப் பயணத்தின் போது வெளியுறவுத் துறை நிர்ணயிக்கும் தினப்படியும் உண்டு. ஆண்டுக்கு 34 முறை விமானப் பயணமும் பயன்படுத்திக் கொள்ளலாம். உறுப்பினரின் துணைவர் ஆண்டிற்கு 8 முறை விமானத்திலும், எண்ணிக்கையில்லாத முறை இரயிலிலும் டில்லிக்கு வந்துசெல்லலாம்.<br />
<br />
<b>எழுதப்படாத விதியின் படி:</b><br />
உள்ளாட்சி அமைப்புகளின் பாராமரிப்புச் செலவிற்கு நீங்கலாக, சாலை, நூலகம், மருத்துவ வசதி, கணினி கல்வி, சமுதாயப்பணிகள் போன்ற பணிகளுக்கு ஆண்டிற்கு ஒதுக்கப்படும் 5 கோடி தொகுதி மேம்பாட்டி நிதியை விரும்பிய நபர்களுக்கு/அமைப்பிற்குக் கொடுத்து முழுதும் அல்லது முழுமைக்குச் சற்று குறைவாகவோ எடுத்துக் கொள்ளலாம்.<br />
<br />
பெரிய கல்லூரி/பள்ளிகளில் ஆள் சேர்க்கைக்குப் பரிந்துரைக் கடிதம் வழங்கி விரும்பமான தொகையை வாங்கிக் கொள்ளலாம். எம்.பி. கோட்டா என்று சில நிரந்தர எண்ணிக்கையிலும் சில கல்வி நிலையங்கள் வழங்குகின்றன.<br />
<br />
ஆற்று மணல், கல்குவாரி, மரங்கள் போன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசின் இயற்கை வளங்களைப் பங்குபோட்டோ, போடாமலோ எடுத்து விற்றுக் கொள்ளலாம்.<br />
<br />
சாலையோரக் கடைகள் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கும், சிறிய நிறுவனங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கும் வழங்கும் அன்பளிப்பு போல பெரு நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கடமைப்பட்டுள்ளன. மந்திரியானால் பன்னாட்டு நிறுவனங்களும் இதில் அடக்கம்.<br />
<br />
பினாமி பெயரில் மலிவான விலையில் ஒரு பெரிய நிலத்தை வாங்கிவிட்டு, அதன் அருகே அரசின் ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டுவந்தால், நிலத்தின் மதிப்பு அபரிவிதமாக வளர்த்துக் கொள்ளலாம்.<br />
<br />
வலுயில்லாத உரிமையாளரை மிரட்டி விரும்பிய நிலங்களை அல்லது வணிக வளாகங்களை வாங்கிக் கொள்ளலாம்.<br />
<br />
அறக்கட்டளை அல்லது சேவை மையம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டால் மறைமுகமாகப் பெரிய கையூட்டுகளைக் கைமாற்றிக் கொள்ளலாம்.<br />
<br />
அரசின் செலவில் அமைக்கப்படும் அனைத்து திட்டங்களிலும் இலவசமாகத் தங்கள் பெயர், படங்களைப் போட்டுக் கொள்ளலாம்.<br />
<br />
நாடாளுமன்றத்தில் ஏதேனும் மசோதா வாக்கெடுப்பு என்றால் வாக்குகளை சந்தை நிலவரத்திற்கு விற்கலாம். குறிப்பாக குடுயரசுத் தேர்தலில் நல்ல வருமானம் ஈட்டலாம்.<br />
<br />
தனது சொந்தத் தொழிலுக்கு ஊரு விளைவிக்கும் அரசு, தனியார் போட்டியாளர்களின் செயல்பாட்டை நீக்கலாம்.<br />
<br />
இலவச வெட்டி-சேலை முதல் இலவச குடியிருப்பு வரை அனைத்திற்கு விலை வைத்து விற்றுக் கொள்ளலாம்.<br />
<br />
மாநில, உள்ளாட்சித் தேர்தல்களில் விரும்பியவரை வெற்றிபெறவைத்து சந்தா வாங்கிக் கொள்ளலாம், பிரச்சார ஊதியம் எனப் பல ஊதியங்கள் கிடைக்கும்.<br />
<br />
யாருடைய பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதோ அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.<br />
<br />
இவ்வளவு அதிகாரமிக்கப் பதவியை நேர்மையாகப் பயன்படுத்தும் தகுதியுடையோருக்கு வழங்கி தப்பித்துக் கொள்ளுங்கள்<br />
<br />
<small><b>ஆதாரம்:</b><br />
நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம், படியூதியம் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1954<br />
லஞ்சவொழிப்பு அறிக்கைகள் </small><br />
<br />
-சிறகு <a href="http://siragu.com/?p=13493" rel="nofollow" target="_blank">இதழுக்காக</a> எழுதியது</div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-36808396608371534612014-03-14T23:30:00.001-07:002014-04-13T19:33:17.886-07:00மரணதண்டனையைத் தடை செய்யவேண்டுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">குறுகிய கண்ணோட்டத்தில் இந்தியாவில் மரணதண்டனையை முழுதும் கைவிடவேண்டி அண்மையில் கோரிக்கைகள் இங்கே எழுப்பப்படுகின்றன. உண்மையில் மரணதண்டனையைக் கைவிட்டு அதற்கு இணையாக பிணையில்லாத ஆயுள்தண்டனை தரலாமா? நடைமுறையில், பாதிக்கப்பட்டவருக்கு அரசின் சார்பில் உதவிகள் செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லை ஆனால் குற்றவாளிக்கு உணவு, மருத்துவம், பாதுகாப்பு, நிர்வாகச் செலவு என பலவற்றை அரசு செய்ய வேண்டும் என்கிறது. துகாராம் ஓம்பலே என்ற சாதாரண காவலர் தன்னுயிரை இழந்து தான் கசாபைப் பிடித்துத் தந்தார். அதன் மூலம் தான் பாகிஸ்தான் சதி வெளியில் தெரிந்தது. ஆனால் அசோகச் சக்கரத்துடன் துகாராம் குடும்பத்தைவிட்டு விட்டு நான்காண்டுகளில் குற்றவாளிக்கு<wbr></wbr>ச் செலவு செய்த தொகை மட்டும் 30 கோடி. எங்கே இருக்கிறது சமதர்மம்? பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்குக் கூட மொத்தமாக இவ்வளவு செலவளித்து இருக்கமாட்டோம். இன்னும் ஆயுள் தண்டனை என்றால் எத்தனை குடிமகனின் உழைப்பை வாங்கி வீணடித்திருக்க வேண்டும்? குற்றவாளிக்கு ஆயுள் முழுக்கச் செலவு செய்து பாதுகாக்க எத்தனை மக்கள் கூடுதலாக வரிசெலுத்தி உதவுவார் என எண்ண வேண்டும்.</div><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF8zIIuRvNozo-4zFfcZprf2e-MfNjnmPwZAoDWyMCj3EtWOdn6V81eYZNivJuOaJ3V_fbQWiHTkvtckDRNif0hbP5tP4KDDYwx_-0-QlbtUb8IplA6XmwrQ6rpbUelZKPXfCO7EBKdl0/s1600/Death_penalty.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF8zIIuRvNozo-4zFfcZprf2e-MfNjnmPwZAoDWyMCj3EtWOdn6V81eYZNivJuOaJ3V_fbQWiHTkvtckDRNif0hbP5tP4KDDYwx_-0-QlbtUb8IplA6XmwrQ6rpbUelZKPXfCO7EBKdl0/s1600/Death_penalty.jpg" height="320" width="222" /></a></div><span id="goog_1441734856"></span><span id="goog_1441734857"></span><br />
</div><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><a name='more'></a></div><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">முக்கியமான சிக்கல் வேறொன்றும் உள்ளது, இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் கொலைவழக்கு, காஷ்மீர் படுகொலை வழக்குகளில் சிக்கிய மூன்று முக்கிய கைதிகள் கந்தகார் விமானக் கடத்தலின் போது விடுவிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்தியா வந்தது. மாறாக விரைவான மரண தண்டனை வரலாற்றை மாற்றி எழுதியிருக்கும். இதனையும் நினைவில் கொள்ளும் போது மரணதண்டனையின் அவசியம் தெரியும். குற்றவாளியையும் பாதுகாக்கவேண்டும், தீவிரவாதிகளிடம் பிணையாகாமல் மக்களையும் காக்க வேண்டும் என்பது தேவைதானா?</div><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"></div><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லப் படும் காரணங்களில் ஓன்று பொதுவாக இத்தண்டனை பாரபட்சமுடன் நடக்கிறது என்பதாகும். ஆனால் எந்தவிதத் தண்டனையானாலும் அதே குற்றச்சாட்டு உள்ளதே, மாநில அரசு விரும்பியவரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலையும் செய்கிறது.எனவே நடைமுறைப்படுத்தலில் தான் கவனம் வேண்டுமே ஒழிய கைவிடலில் இல்லை. தண்டனைகள் பாதுக்கப்பட்டவருக்கு நிவாரணமாக மட்டும் அல்ல மீண்டும் நடக்காமலிருக்கத் தடுப்பு நடவடிக்கையாகும் எனவே உயிருக்கு உயிர் என்ற ஒப்பிடல் சரியில்லை என்பது அடுத்த வாதம். போர்க்களத்தில் எதிரியைச் சுடவேண்டும் போது உயிரை எடுக்கும் உரிமை அரசுக்கில்லை என்பது அர்த்தமற்றது.</div><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br />
</div><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">குற்றவாளி திருந்தி நடக்க வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அது சூழலைப் பொறுத்தே இருக்கவேண்டும். மனிதஉரிமை என்கிற கோரிக்கைள எப்போதும் சட்ட நடவடிக்கைக்கு எதிராகவே தான் பயன்படுத்தப்பட்டுகிறது. என்றாவது தீவிரவாதம் அல்லது வன்கொடுமைக்கு எதிராகப் போராட்<wbr></wbr>டமோ, சமாதானப் பேச்சோ நடந்துள்ளதா? எனவே அவ்வாறு இருபக்கமும் ஒலிக்காத ஒலிகளை ஓதிக்கியாகவேண்டும். முடிந்தளவிற்கு பாதிப்பின் தீவிரம் அறிந்து மரனதண்டனையைக் குறைக்கலாம் ஆனால் முழுதும் நிறுத்துவது தேவையற்றது.</div><div><br />
</div><br />
விஜயபாரதம் இதழுக்காக எழுதியது</div>Neechalkaranhttp://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-48438420651276151522014-02-25T17:46:00.000-08:002014-02-25T17:46:19.383-08:00விளம்பரங்களுக்கு விலை போகிறோம்நாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிருக்கும். அதைப்போல பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரம் என்கிற மாயத் தேவையும் நம்முடன் சேர்ந்துவிட்டது. இதனால் அறிவியல் அணுகுமுறைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு ஆடம்பர அணுகுமுறையே பிரதானமாக மாறிவருகிறது. எங்கு யார் சொன்னாலும் உடனே மாறிவிடுவோம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் வேண்டிய ஊட்டச்சத்து இல்லை அதனால் இந்தச் சத்து மாவைப் பாலில் கலக்கிக் குடியுங்கள் என்றதும், குடும்பமே விழுந்து விழுந்து குடிப்போம். அந்த மாவைக் குடிக்காவிட்டால் குடல்வெந்து குன்றிவிடுவோம் என நினைத்துக் கொள்கிறோம்.<br />
<a name='more'></a><br />
ஆல், வேம்பு, வேல் போன்ற மரக்குச்சி கொண்டும், நெற்சாம்பல், செம்மண் போன்ற தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் கொண்டும், பற்பொடிகள், மூலிகைத் தூள்கள் என்று பிற தயாரிப்பைக் கொண்டும் பல் விளக்கி வந்த நம்மிடம், சுகாதாரம் என்கிற போர்வையில் எத்தனைப் பொருட்கள் வந்துள்ளன என்று பார்ப்போம். தூத்பிரஸ் என்கிற புதுவகை பல்குச்சி வஸ்துவை இறக்குமதி செய்தோம். பின்னர் பாரம்பரிய முறைகளை முடக்கிவிட்டு, பற்பசையுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தோம். அதோடு நிற்கவில்லை, பற்பசைகளில் பல வகை வெளிவரத்தொடங்கின, வெண்மை நிறம் தருபவை, சுவாசப் புத்துணர்ச்சி தருபவை, கிருமிகளை நீக்குபவை, ஈறுகளைப் பலப்படுத்துபவை, உப்புவுள்ளவை என வேளைக்கு ஒன்றாக வந்து கொண்டே உள்ளன. பற்பசை இப்படியிருக்க பல்குச்சியும் தன் பங்கிற்கு, ஃபிலக்சிபில், ஜிக்ஜாக், 360டிகிடி, மருத்துவர்கள் பரிந்துரை எனப் பலவகைகளில் பரிணாமம் அடைந்துவிட்டது. இதற்கிடையில் நாக்குத் துடைப்பான், வாய் கழுவுநீர் என்று புதிய பரம்பரைகளும் வந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாளில் ஒவ்வொரு பல்லிற்கும் ஒவ்வொரு பற்குச்சியும், பற்பசையும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒவ்வொரு விளம்பரமும் சில ஆயிரம் மக்களின் மனதில் அறிவீனத்தை அறிமுகப்படுத்துகிறது. தங்களுக்குள்ளேயே தான் பயன்படுத்தும் பொருள் சரியில்லையோ என எண்ண வைக்கிறது. எத்தனை நவீனம் வந்தாலும் வேப்பங்குச்சிக்கு இணையாக பல்லைப் பலப்படுத்துமா? விரல்கொண்டு தேய்ப்பதைவிட எதுவும் ஈறுகளுக்கு வலுசேர்க்குமா?<br />
<br />
இங்கே சுட்டிக் காட்ட விரும்புவது அறிவியல் வளர்ச்சியைப் பகடிசெய்வதல்ல; மாறாக நாம் விலை போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே. நமக்குத் தேவையிருக்காத போதும் விற்கப்படுகிறதே என்று வாங்குவோர் அதிகரித்துவிட்டனர். தற்போது பயன்படுத்திவரும் பொருள் திருப்திகரமாகயிருந்தாலும், தனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஒரு பற்பசை விளம்பரத்தில் சிரித்தார் என்பதற்காகவே அந்தப் புதுப் பொருளை வாங்குவோர் எத்தனைப் பேர்? ஷாம்பூ எனப்படும் சிகைகழுவியை எடுத்துக் கொள்ளுங்களேன், பொடுகு போக்குபவை, கறுப்பு நிரம்தருபவை, நீளமான முடிவளர்ப்பவை, சிக்கு நீக்குபவை, பட்டுபோன்ற மென்மைதருபவை என வகை வகையாக வந்துவிட்டன. அதுவரை சிகைக்காய் போட்டு வளர்ந்த தலைகள் கூட சிகைகழுவியின் மீது ஆர்வம் கொள்ளப்பட்டன. ஆனால் அப்படியென்ன சிகைக்காய் செய்யாததை இந்தத் திரவங்கள் செய்துவிட்டன என்றால் ஒன்றுமில்லை. ஆனால் இத்தகைய இரசாயனச் சிகைகழுவிகளால் முடியும், தோலும் கெட்டதுதான் மிச்சம். எவை வேண்டுமோ பயன்படுத்துங்கள் ஆனால் அவற்றின் தேவை இருக்கிறதா என யோசித்துப் பார்த்துப் பயன்படுத்துங்கள்.<br />
<br />
மற்றும் ஒரு எளிமையான நுகர்பொருள் கைப்பேசி. ஒரு குழந்தை பிறந்து விவரம் தெரிகிறதோ இல்லையோ, கைப்பேசியை இயக்கத் தெரிந்திருக்கிறது, தனக்கு என்று ஒரு கைப்பேசியை வாங்கிக் கொள்ளவும் முனைகிறது. அப்படி வாங்கிய கைப்பேசியை எத்தனை நாள் பயன்படும் என்றால் அடுத்த பிறந்த நாள் வரும்வரை மட்டுமே. இது குழந்தையின் பிறந்த நாள் அல்ல புதியதாகச் சந்தைக்கு வரும் கைப்பேசியின் பிறந்த நாள் ஆகும். இதைக் குழந்தைகள் மட்டும் செய்யவில்லை ஏறக்குறைய பலரும் புது ரகம் வந்தவுடன் தனது பழைய பொருட்களை வீசிவிடுகிறார்கள். தனக்குத் தேவையே இல்லாவிட்டாலும் அந்தப் புதிய பொருளைப் பயன்படுத்திவிடவே ஆசைப்படுகிறார்கள். அந்தப் புது ரகம் எடை குறைவாக இருக்கிறது அல்லது சத்தம் துல்லியமாக இருக்கிறது என்று வலுவற்ற காரணங்களுக்காக விலை கொடுத்து வாங்குகிறார்கள். உண்மையில் அவர்களை விளம்பரங்கள் வாங்கிவிட்டன.<br />
<br />
சிகப்பழகு பெற்று உலகை உங்கள் பக்கம் திருப்புங்கள் என்று கூவி முகக்களிம்புகள் விளம்பரம் செய்யப்பட்டால், ஏதோ அந்தக் களிம்புதான் சொத்து என்கிற ரீதியில் காட்டுவதை எல்லாம் முகத்தில் பூசிக் கொள்கிறோம், பின்னர் இளவயதிலேயே தோல் சுருக்கங்களைப் பெற்று வருத்தங்கள் கொள்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் இதைப் போன்றவொரு பொருள் விளம்பரமே இல்லாமல் அண்ணாச்சிக் கடைகளில் இருக்கலாம், அல்லது அம்மா கைப்பக்குவத்தில் கடலை மாவும் பாசிபருப்பு மாவும் போதுமானதாக இருக்கலாம். இதெல்லாம் பத்தாது அதுதான் வேண்டும் என்றால் குறைந்தது ஒரு பொருளை மட்டுமாவது பயன்படுத்துங்கள். அடிக்கடி தோல் சார்ந்த அழகு சாதனப் பொருட்களை மாற்றிவதும் ஆபத்து என்பதை மனதில் கொள்க.<br />
<br />
போன தலைமுறையில் நமக்கெல்லாம் கம்பங்கஞ்சியும், கேப்பக்கூழும், கைக்குத்தல் அரிசியும் தான் பிரதான உணவாகயிருந்திருக்கும். ஆனால் ஆடம்பரம், கெளரவம்,என்கிற பல காரணங்களுக்காகப் படிப்படியாக பாலிஷ் போட்ட அரிசி, இன்ஸ்டன்ட் மாவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என கிடைப்பதையெல்லாம் உண்டு பல நோய்கள் கிடைக்கப்பெற்றுள்ளோம். கடைசியில் பழங்கஞ்சி உண்டு வாழ மருத்துவரொருவர் பரிந்துரைப்பதுடன் முடிகிறது ஒரு தலைமுறை. இந்த அறிவுரையை முன்னரே கடைபிடித்திருந்தால் எவ்வளவு ஆரோக்கியம்?<br />
<br />
ஒரு சாராரின் வாதம் என்னவென்றால் தொழிற்நுட்பம் வளர்கிறது அதனால் நவீனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதாகும். அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது அந்தத் தொழிற்நுட்பம் என்ன? அது நமக்குத் தேவையா? பின்விளைவுகள் வருமா? என ஆராய்ந்து பிறகு வாங்குங்கள் என்கிறது. விளம்பரங்களைக் கண்டு விலை போகாதீர்கள் என்கிறது.<br />
<br />
மற்றொரு சாராரின் வாதம் என்னவென்றால் இப்படி நுகர்வோர்கள் பொருட்களை அதிகம் வாங்கினால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதாகும். ஆனால் இப்படி தேவையில்லாதவற்றை வாங்குவதற்கு ஏன் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கத்தைக் குறைக்கவேண்டும்? பணவீக்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே, குறைந்தது அந்தப் பணம் வேறு எங்காவது முதலீடாகவாவது மாறுமே. நமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்களின் சேமிப்பே. நமது சேமிப்பின் மூலமே பல முக்கியப் பணிகளுக்கு முதலீடு கிடைக்கிறது. இத்தகைய நுகர்வோர் கலாச்சாரத்தால் பணச் சேமிப்பும் பாதிக்கும்.<br />
<br />
எது தேவை எது தேவையில்லை என நாம் செய்யும் தொழிலில் தீர்க்கமாக முடிவெடுக்கும் நாம் செலவளிக்கும் பணத்தில் தீர்க்கமாக ஆராய்வதில்லை. சேமிப்பு என்பது உற்பத்திக்குச் சமம் என்பதையும் மனதில் கொண்டு விளம்பரங்களுக்கு மயங்கி தேவையில்லாதவொன்றை தேடிப்போகாமல் இருக்கலாமே.<br />
<br />
வல்லமை இதழில் <a href="http://www.vallamai.com/?p=40662" rel="nofollow">வெளிவந்த</a> கட்டுரை நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-82291748198581111632014-02-24T17:36:00.000-08:002014-03-14T23:30:10.690-07:00நாடெல்லாவால் இந்தியாவிற்குப் பெருமையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
அண்மையில் மென்பொருள் சக்கரவர்த்தி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்த சத்ய நாடெல்லா பதவியேற்றார். அவர் ஒர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனாவார். குறிப்பாக, தகவல் தொழிற்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்களின் திறனை நமக்கு அடையாளப்படுத்துவதற்காக நம் முன் ஊடகங்களால் கொண்டுவரப்படுகிறார். ஊடகச் சுழல்கள் எல்லாம் ஒர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேறு நாட்டினர் ஒருவர் உயரிய பதவியை அடையும் போது உடனே இந்தியாவிற்குப் பெருமை என்றும் ஒரு வரியைச் சேர்த்துவிடுகிறது. மேலோட்டமாக நமது விட்டுப் பிள்ளை மேடை ஏறும் போது அனைவரும் மகிழ்வது போன்றது என்றாலும் அதன்பின் உள்ள தாக்கத்தை உணர மறுக்கிறது. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd1wuxt1L_YjlL9OtiCsAq_EqnQDNV2R9pZ00gcCM8unrQzj3cSyxfJsAXKHKezztIzaAgkk0grgzcVJBmPR_qIpM3FxZyBhZnOHMc8AsibbJz9P1q_iER40NI6nPr-tZx9_1kAfYpQNY/s1600/Natella.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd1wuxt1L_YjlL9OtiCsAq_EqnQDNV2R9pZ00gcCM8unrQzj3cSyxfJsAXKHKezztIzaAgkk0grgzcVJBmPR_qIpM3FxZyBhZnOHMc8AsibbJz9P1q_iER40NI6nPr-tZx9_1kAfYpQNY/s320/Natella.jpg" /></a></div>
<a name='more'></a><div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
பத்தாண்டுகளுக்கு முன் கொலம்பியா விண்வெளி ஓடத்தில் உயிரிழந்த ஹரியானாவில் பிறந்த பெண்மணியாகட்டும், சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் அதிக நேரம் பயணித்த இந்திய வம்சாவளிப் பெண்மணியாகட்டும், <wbr></wbr>அவர்களின் சாதனை சிறப்பானதே என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர் என்பது எத்தகைய உண்மை? குறிப்பாக நாசா போன்ற அமெரிக்கச் சிந்தனையுடைய ஆய்வகத்திற்கு உழைத்துக் கொடுப்பதுதான் நாட்டுக்குப் பெருமையா? அல்லது இந்திய குடியுரிமையைத் துறந்து நாட்டைவிட்டுப் போனவர்களால் நாட்டுக்குப் பெருமையா? உலகில் ஐந்தாவது நாடாக நிலவைத் தொட்டது இந்தியா, எனவே நமது போட்டியாளர் நாசா சார்பாக வேலைசெய்வது பெருமை என்று கொள்ளலாமா? அவர்கள் அனைவரும் இந்தியாவிற்காக உழைக்க வேண்டும் என்பது அதிகபடியான வாதம் என்றாலும் நாட்டிற்குப் பெரிய பலன் இல்லாமல் பெருமை சேர்த்தவராக அடையாளப்படுத்துவது முரண்தானே?</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
இதன் மூலம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சொல்லும் செய்தி என்ன என்னவென்றால், நன்றாகப் படித்து நாட்டைவிட்டு வெளியே போய் நிறைய சம்பாரித்து அங்கேயே வாழ் என்பதாகும். மற்றொரு செய்தி என்னெவென்றால் தலையே போனாலும் தாய்நாட்டில் மதிப்பில்லை என்பதாகும். எத்தனையோ வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்நியச் செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டிக்கொடுத்து<wbr></wbr>க் கொண்டு இருக்கிறார்கள். அதனால் வெளிநாட்டு வேலை பெருமையில்லை என்றில்லை ஆனால் வெளிநாட்டினராக வேலை பெருமையில்லை என்பதுதான் உண்மை. இங்கு விளையும் உயர்தர தேயிலைகளை ஏற்றுமதி செய்துவிட்டு சூப்பர் டஸ்ட் டீ என்று மிச்சத்தை நாம் குடிப்பது போல திறமையானவர்களை எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் அள்ளிக் கொள்ளவிட்டு புளங்காயிதம் அடைந்து கொள்கிறோம்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
இதுபோக மற்றொரு பார்வை, இக்கரைக்கு அக்கரை பச்சை. நமது அளவுகோல்கள் எல்லாம் மேற்குலக மாயைகளால் நிரப்பப்பட்டவை. மேற்கு நாடுகளின் அங்கிகாரம் தான் பெருமை என்கிற போக்கும் தவிர்க்கப்படவேண்டும். ஆஸ்கர் தெரிந்த அளவிற்கு தாதாசாஹெப் பால்கே விருதைக் கண்டுகொள்வதில்லை. புக்கர் பரிசு தெரிந்த அளவிற்கு ஞானபீடம் விருதைக் கண்டுகொள்வதில்லை. ஷேக்ஸ்பியர் தெரிந்த அளவிற்கு கம்பன் தெரிவதில்லை. இங்கு ஒருவர் திறமையாக நிர்வாகம் செய்து கொண்டிருப்பார், அல்லது வாய்ப்புகளுக்காகக் காத்திருப்<wbr></wbr>பார் ஆனால் நாமோ அமெரிக்க மாகாணத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளியினரையே கொண்டாடுகிறோம், பெருமை கொள்கிறோம்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
உண்மையில் அவர்கள் திறமைசாலிகள், வெற்றியாளர்கள், விருப்பமான இடத்தில் பணி செய்கிறார்கள். இவர்களின் நல்ல பண்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அவற்றை இந்தியாவுடன் முடிந்து பெருமை கொள்வது நம்மை நாமே ஏளனமாகப் பார்ப்பதற்குச் சமம். "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமில்லை என்ன செய்கிறோம் என்பதே முக்கியம், பிற நாடுகளுக்குச் சென்று அறிந்து கொண்டவைகளைக் கொண்டுவந்து இம்மணுக்குப் பயன்பட செய்தால் அதனைப் பெருமை என்று சொல்லலாம். அதுவரை வாழ்த்துக்களும், மகிழ்ச்சிகளையும் மட்டும் கூறிக் கொள்வோமே.</div>
</div>
<br />
<br />
விஜயபாரதம் இதழில் வெளிவந்தது.</div>
நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9203734908765109231.post-63929859239715252452014-02-23T17:41:00.000-08:002014-03-02T20:56:19.771-08:00தங்கத்தின் மறுபக்கம்உலகிலேயே தங்க நுகர்வோர்கள் அதிகம் கொண்ட நாடும், உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுமான இந்தியா, தங்கத்தால் கிடைக்கிற லாபத்தைவிட இழப்பையே அதிகமாகச் சந்திக்கிறது என்கின்ற பொருளாதார உண்மை பொதுவெளியில் உணரப்படுவதில்லை. இது உண்மை என்று நம்பக்கூட பலருக்கு சிரமமாக இருக்கலாம். தங்கத்தின் தொழில்முறைப் பயனைவிட அதன் ஆபரண அல்லது வசீகரப் பயனே அதற்குச் சந்தையை வழங்குகிறது. மேலும் அதிகரிக்கும் தங்கத்தின் தேவையே தங்கத்தின் விலையை ஏற்றவும் காரணியாகிறது. திரும்பத் திரும்ப வாங்கி திரும்பத் திரும்ப தங்கத்தின் தேவையை அதிகரித்து திரும்ப வாங்கி நாமே சுவரொன்றில் முட்டிக் கொள்கிறோம். அடிப்படையில் தங்கத்தால் விளையும் லாபம் முதலீட்டு லாபம் இல்லை, ஊகம் எனப்படும் பேரம் பேசி அதிகரிக்கப்படும் வெற்று வேட்டு.<br />
<a name='more'></a><br />
தங்கம் என்பது இரும்பு, பாதரசம் போன்ற ஒருவகை தனிமம். ஆனால் மற்ற தனிமத்தைப் போல அதிகமாகத் தொழிற்துறையில் பயன்படுவதில்லை. இருந்தும் அதன் வசீகரக் குணமே அதன் மதிப்பை மற்ற தனிமங்களைவிட அதிகமாக்குகிறது. கொஞ்சம் இரும்பை வெட்டி எடுத்தால், அதன் மூலம் கனரகங்கள், விவசாய உபகரணங்கள், ஆயுதங்கள் எனப்பல விதத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்குத் துணைசெய்யும்; ஆனால் அதே அளவு தங்கத்தை வெட்டி எடுத்தால் (கவனிக்க, இதற்கு செலவும் அதிகம்) கொஞ்சம் மருத்துவத்துறையிலும், மின்னணு உற்பத்தியிலும் மட்டுமே பயன்பட்டு நாட்டின் உற்பத்திக்கு உதவும். மீதமுள்ள தங்கம் எல்லாம் ஆபரணங்களாக அல்லது செல்வமாக அடங்கிவிடும். தங்கத்தைப் போல இரும்பை ஆபரணமாக மாட்டி அழகு பார்க்கமுடியாதுதான் ஆனால் இரும்பைப்போல உற்பத்தியைத் தரவல்லதல்ல தங்கம். ஒரு நாட்டின் பார்வையில் தங்கம் என்பது உப்பைப் போல அவசியம் தேவை ஆனால் அளவாகத்தான் தேவை. தங்கத்தில் அதிக முதலீடு என்பது தனிமனிதக் குறுகியப் பார்வையில் வளமானதாக இருக்கலாம், ஆனால் தொலைநோக்குப் பார்வையில் நாட்டின் வளர்ச்சி என்ற விரிந்தபார்வையில் அதுவொரு நட்டமே.<br />
<br />
முதலில் நடைமுறை ஆதாரத்தைக் காண்போம். தனிமனிதனாக அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்தால் தங்கம் முதலில் விலையேறும், மக்களும் மகிழ்ந்து தங்கத்தில் மேலும் முதலீடு செய்வார்கள். தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை என்பதில் ஐயமில்லை. ஆனால் மற்ற பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும். இது தானாக ஏற்படுத்திக் கொண்ட பணவீக்கம். காரணம் ஒரு பசுவை வாங்கி பால் வியாபாரம் செய்பவர், தங்கத்தில் பணத்தைப் போட்டு வியாபாரத்திற்கு முழுக்கு போட்டால் பாலுக்கு என்ன செய்வோம்? விவசாயி அவ்வாறு செய்தால் சோற்றுக்கு என்ன செய்வோம், இதன் மூலம் விலையேற்றம்தான் பரிசாக்கப்படும். ஆரோக்கியமான முதலீடு என்பது உற்பத்தியுடன் லாபத்தைக் கொடுக்க வேண்டும். உற்பத்தி இல்லாமல் லாபம் மட்டும் வருகிறதென்றால் எங்கோ யாரோ நட்டப்படுகிறார் என்பது எளியமொழி. உண்மைதான் 1971ல் 200ரூபாய்க்கு விற்ற தங்கம் 2011ல் 25000ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்றால் நாற்பது ஆண்டுகள் 125 மடங்கு லாபம் என்று பொதுபுத்தியில் எட்டலாம். ஆனால் 1981ல் 10000 ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் 2011ல் 7 பில்லியன் டாலர் மதிப்புடையதாகிறது(இன்ஃபோசிஸ்) என்றால் காரணம் முதலீடு உழைப்பு சார்ந்த, உற்பத்தி சார்ந்த துறையில் அமைந்துள்ளதே காரணம். மாறாக 10000 ரூபாயை 1981ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதிகபட்சம் 3ஆயிரம் டாலர் 2011ல் கிடைத்திருக்கும். அந்த உற்பத்தி மூலம் எத்தனை பேர் வருமானம் ஈட்டியிருப்பார்கள்? அரசுக்கு எத்தகைய லாபம்? என்று யோசித்தால் இது எவ்வளவு பெரிய நட்டம் என்பது புலப்படும். நிலத்தில் அல்லது தங்கத்தில் என்று உற்பத்திக்கு ஒவ்வாத துறைகளில் போடப்படும் முதலீடு தனிமனிதனுக்கு வேண்டுமானால் லாபகரமாக இருக்கலாம், ஆனால் அதுவே மக்கள் வளமிக்க இந்தியா போன்ற நாடுகளில் உழைப்பிற்கு மூலதனமாக அமைந்தால் எப்படி பல்கிப்பெருகும் என்பது யூகிக்ககூடியதே.<br />
<br />
இத்தகைய தங்கமயமாக்கலால், தொழில் தொடர்வோருக்கான பணம் முடக்கப்படுகிறது. நாட்டின் சேமிப்பு எல்லாம் மறுமுதலீடு ஆகாமல் ஒடுக்கப்படுகிறது. ஏர் உழாமல் தங்கத்துக்கு அடகு ஆகிறது. முன்பு விளைபொருட்களின் களஞ்சியமாக இருந்த கடை வீதிகள் எல்லாம் தங்க நகை மாளிகைகளாக மாறிவிட்டன. வேலைவாய்ப்புயில்லாமல் நாமோ அடுத்த கடை வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறோம்.<br />
<br />
தங்கத்தில் போடப்படும் பணம் எல்லாம் தூங்கும் பணமே. அதுவே வேலைவாய்ப்பைத் தரும் தொழிற்துறையில் போட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். தற்போதைய நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit) என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 5.3% ஆகும். அதாவது நாம் உற்பத்தி செய்வதை விட அதிகமாக உட்கொள்கிறோம். எளிய மொழியில் சொல்வதென்றால் நோகாமல் நோம்பு கும்பிட முயல்கிறோம். இந்த நிதிப்பற்றாக்குறையால் நாடு உற்பத்தி செய்வதைவிட அதிகமாகக் கடன்வாங்கி செலவழித்துள்ளோம் என்று கொள்ளலாம். மற்றொருவிதமாகச் சொல்வதென்றால், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகச் செய்கிறோம். இந்தச் சமன்நிலை மாற்றத்தில் 30% தங்கத்தின் இறக்குமதியால் விளைந்தது. தங்க இறக்குமதியைக் குறைத்தாலே, பற்றாக்குறை 30% குறையும். மேலும் இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருள் ஏதாவது ஒருவிதத்தில் நாட்டின் உற்பத்திக்கு உதவாவிட்டால் எப்படி வளர்ச்சியிருக்கும்? இதனைக் கட்டுப்படுத்தவே தங்கத்தின் மீது இறக்குமதி தீர்வை வரியை அதிகரிக்க அரசு ஆலோசிக்கிறது. நாடு தனது கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பதற்குப் பதில், உள்நாட்டு நிதி சேமிப்பு அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தால் இந்தப் பற்றாக்குறை களையப்படும். அதனாலேயே தங்கத்தில் போடப்படும் பணத்தை விட வங்கியில் போடப்படும் சேமிப்பே நாட்டிற்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும்.<br />
<br />
நடைமுறையில் இது திடீர் சாத்தியமில்லை. காரணம் அத்தகைய முதலீட்டுத் தேவைகள் பற்றி தனிமனிதர்கள் அறிந்திருப்பதில்லை. மேலும் இத்தகைய முதலீடுகள் உடனடியாக பணமாக மாற்றக்கூடியதில்லை மற்றும் பாதுகாப்பும் சற்று குறைவுதான். ஆனால் குறைந்த பட்சம் வங்கிகள், உற்பத்தி நிறுவனப் பங்குகள், தேசிய சேமிப்பு என்று மற்ற முதலீடுகளுக்குத் தந்து உதவலாம். இதன் மூலம் தூங்கிக் கிடக்கும் செல்வம் துள்ளிப் பெருகி, நாட்டின் வளர்ச்சிப் பணிகள் அதிகரித்து, உற்பத்தித் திறனும் படிப்படியாக அதிகரிக்கும்.<br />
<br />
83வது சொல்வனம் இதழில் <a href="http://solvanam.com/?p=24525" rel="nofollow">வெளிவந்த</a> கட்டுரைநீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.com0